புதுகை பண்பலை 91.2 FM.
புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் புதுகை பண்பலை புதுக்கோட்டை மாவட்டத்தின் முதல் அதிகாரப்பூர்வமான அரசு அனுமதி பெற்ற ரேடியோ புதுகை எப்எம் 91.2 ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தொலைதூரக் கிராமப் பகுதிகளை தேடிச்சென்று சாமானிய மக்களையும் இணைத்து சமூகத்திற்கு தேவையான பல பயனுள்ள தகவல்களை வழங்கும் முக்கிய ஊடகமாக சமுதாய வானொலி செயல்பட்டு வருகிறது. இந்த புதுகை எப்.எம் 91.2 அலைவரிசையில் சிறப்பு நிகழ்ச்சி தலைப்பின்கீழ் வழிகாட்டும் வெளிச்சம் என்ற நிகழ்ச்சியானது ஒவ்வொரு வார திங்கள் கிழமை மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் நம் பள்ளி மற்றும் பார்வைக்குறைபாடுடையவர்களின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழிச்சியில் முன்னாள் மாணவர்கள், தற்போது படிக்கும் மாணவர்கள், பள்ளி பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு நிறைய தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் மாணவர்களின் தனித்திறமைகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவற்றை நீங்கள் கேட்டு பயன்பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.