அன்பு மாணவச் செல்வங்களே!
நேற்றைய தூரிகையின் புதிய வடிவமைப்பு
உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என நம்புகிறோம். தொடர்ந்து இனிவரும் தூரிகைகளும்
இதுபோல புதுப்புது மாற்றங்களோடு வெளிவரும். படித்துப் பயன்பெறுங்கள்.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் 10 இனியவைகூறல் குறள் எண் 5
நாளொரு குறட்பா: - அதிகாரம் 10 இனியவைகூறல் குறள் எண் 5
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்று பிற.
விளக்கம்: பணிவுடைய இனிமையான சொற்களைப் பேசுவதே ஒருவனுக்கு சிறந்த அணிகலனாம்.
மற்றவை அணிகலன் ஆகாது.
***
சிந்தனைச் செவ்வாய்: - காந்தி:
சிந்தனைச் செவ்வாய்: - காந்தி:
உண்மையையும், அகிம்சையையும் கைக்கொண்டு, தேச விடுதலைக்காகப் பாடுபட்ட மஹாத்மா காந்தியடிகள் அவர்கள், இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவருடைய சிந்தனைகள் சில இங்கே:
-> மற்றவர்கள் உங்களிடம் எப் படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதேபோல மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.
-> அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளாதவர்கள் உடல் நலமுடன் இருக்க முடியாது.
-> நீங்கள் உண்ணும் உணவே அருமருந்தாகும்.
-> சாப்பிட வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டால் உண்ணாமல் இருப்பதே சிறப்பு.
-> சிறுநீரைக் கழிக்க வேண்டாமா, அடக்கி வைக்கலாமா என்ற தயக்கம் ஏற்படும்போது, சிறுநீரை வெளியேற்றுவதே உடல் நலனுக்கு உகந்தது.
-> சாப்பிடும் போது மௌனத்தை கடைபிடியுங்கள்.
-> எதிர்மறையான எண்ணங்கள் வேண்டாமே, ஆக்கபூர்வமான எண்ணங்களையே உரமிட்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.
-> மற்றவர்கள் உங்களிடம் எப் படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதேபோல மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.
-> அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளாதவர்கள் உடல் நலமுடன் இருக்க முடியாது.
-> நீங்கள் உண்ணும் உணவே அருமருந்தாகும்.
-> சாப்பிட வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டால் உண்ணாமல் இருப்பதே சிறப்பு.
-> சிறுநீரைக் கழிக்க வேண்டாமா, அடக்கி வைக்கலாமா என்ற தயக்கம் ஏற்படும்போது, சிறுநீரை வெளியேற்றுவதே உடல் நலனுக்கு உகந்தது.
-> சாப்பிடும் போது மௌனத்தை கடைபிடியுங்கள்.
-> எதிர்மறையான எண்ணங்கள் வேண்டாமே, ஆக்கபூர்வமான எண்ணங்களையே உரமிட்டு வளர்த்துக் கொள்ளுங்கள்.
-> எந்தச் சூழ்நிலையிலும் ஏமாற்றத்திற்கு இடம் தராதீர்கள்.
***
பொதுஅறிவு பொக்கிஷம்: - இலக்கிய பகுதி:
நாளடியார் நூலை இயற்றியவர்கள் யார்?
விடை: சமண முனிவர்கள்
***
சிந்தனைக்கீற்று:
self help is the best help
தன் கையே தனக்குதவி.
***
செய்திகள்:
கர்நாடக சட்டமன்றத்தில் (ஜூலை 29) முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்.
***
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகச் சிறப்பு வகுப்புகளுக்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
***
"மாணவர்களின் வன்முறைக்குத் திரைத்துறையினரே காரணம்" - தமிழிசை பேட்டி.
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.