தூரிகை (மாணவர் இதழ் 39) 27.ஆகஸ்ட்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய சிந்தனைச் செவ்வாயில் ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் சிந்தனைகளைப் படித்துப் பயன்பெறுங்கள்.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் நடுவுநிலைமை குறள் எண்
கெடுவல்யான் என்பது அறிக தன்நெஞ்சம்
நடுவொரிஈ அல்ல செயின்.
விளக்கம்: நடுவுநிலைமை தவறி தீமை செய்தால், நிச்சயம் தான் கெட்டுப் போவோம் என்பதை அறிய வேண்டும்.
***
சிந்தனைச்செவ்வாய்: - லியோ டால்ஸ்டாய்
ஒவ்வொருவரும் இந்த உலகை மாற்ற நினைக்கிறார்களே தவிர, தன்னை மாற்றிக்கொள்ள எவரும் நினைப்பதில்லை.
உண்மை என்பது தங்கத்தைப் போன்றது. அதன் உயர்வால் அல்ல. அதைப் நன்கு புடம்போட்டால்தான் அதைத் தங்கம் என்றே கண்டறிய முடியும்.
எளிமையும் உண்மையும் இல்லாத இடத்தில் நன்மை இருக்கவே முடியாது.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: இலக்கியப் பகுதி:
பெரியபுராணம் நூலை இயற்றியவர் யார்?
விடை: சேக்கிழார்
***
சிந்தனைக்கீற்று:
Truth is stranger than fiction.
உண்மை கற்பனையைவிட விசித்திரமானது.
***
செய்திகள்:
நேற்றுமுதல் தொடங்கியது கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு.
***
பா.சிதம்பரத்தின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
***
உலக பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்றார் பிவி சிந்து.
***
காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம், மூன்றுபேர் கைது.
----------
  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.