அன்பு மாணவச் செல்வங்களே!
எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் நாள், பேரறிஞரின் பிறந்தநாளை முன்னிட்டு,
இன்றைய சிந்தனைச்செவ்வாயில் அவருடைய சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் கேள்வி
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோற்கப் படாத செவி.
விளக்கம்: காதுகளால் கேட்டு அறிவு பெறாத செவிகள், கேட்கும் தன்மையுடையவை
என்றாலும், அவை கேளாத செவிகளே ஆகும்.
***
சிந்தனைச்செவ்வாய்: - அறிஞர் அண்ணா:
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு.
"சாதாரண மக்களை யார்
வேண்டுமானாலும் ஏய்த்துவிடமுடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்ப
படித்தவனாக இல்லாது இருக்கலாம். ஆனால் வளமான பொது அறிவு பெற்றிருக்கிறான்.
வெண்ணெய் எது சுண்ணாம்பு எது என்று வித்தியாசம் கண்டறிய அவனுக்குச் தெரியும்.”
" அரசியல் மூலம் நாம் வேண்டுவது
சில்லரைப் பதவிகளையல்ல, சிங்கார வாழ்வையல்ல, நமது இனத்தின் விடுதலையை நாம் விரும்புகிறோம். அதற்கே அரசியலை நாம்
துணை கொள்ளுகிறோம். அதன் பொருட்டே அரசியலில் பணியாற்றுகிறோம்."
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - இலக்கியப் பகுதி:
அண்ணா தொடங்கிய இதழின் பெயர் என்ன?
விடை: திராவிடநாடு
***
சிந்தனைக்கீற்று:
Failure is stepping stone to success.
தோல்வியே வெற்றிக்கு முதற்படி.
***
செய்திகள்:
மோடி அரசின் முதல் 100 நாட்களில் வளர்ச்சி எதுவும் ஏற்படவில்லை என்று காங்கிரஸ்
குற்றம்சாட்டியுள்ளது.
***
முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி
நிறுவனமான அசோக் லேலேண்ட் சென்னை எண்ணூர் ஆலையில் 16 நாட்கள் தனது உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
***
டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் கடலூர்
மாவட்டத்தில் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
***
சட்ட விரோதமாக குடியேறிய ஒருவருக்கும்
இந்தியாவில் இடமில்லை: அமித்ஶா பேச்சு.
----------பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.