தூரிகை (மாணவர் இதழ் 45) 6.ஆகஸ்ட்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய இசைத்திங்களில், அணில் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கிற பாடல்தான் என்றாலும், அதைத் திரைவாசிப்பானின் குரலில் கேட்டு புது அனுபவத்தைப் பெறுங்கள்.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் புகழ்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
விளக்கம்: பிறந்தால் புகழோடு வாழவேண்டும். இல்லையெனில் பிறவாமையே நல்லது.
***
இசைவெள்ளி: - அணில்:
அணிலே! அணிலே! ஓடி வா.
அழகு அணிலே ஓடி வா.
கொய்யாமரம் ஏறி வா.
குண்டுப்பழம் கொண்டு வா.

பாதிப்பழம் உன்னிடம்,
பாதிப்பழம் என்னிடம்,
கூடிக்கூடி இருவரும்
கொறித்துக் கொறித்துத் தின்னலாம்.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - சுற்றுலாப் பகுதி:
உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி எது?
விடை: நயாகரா
***
சிந்தனைக்கீற்று:
Experience is the good teacher.
அனுபவமே சிறந்த ஆசான்.
***
செய்திகள்:
பெரியார் சிலையின் கீழ் கடவுள் இல்லை என்ற வாசகத்தை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
***
வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டுவந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தத் தயாராக இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
***
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழகம் இணையக் கூடாது என்று ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
***
அரசு நூலகங்களில் கலைஞர் பற்றிய நூல்!
   ----------

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.