தமிழக அரசு மூலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது
பத்திரிக்கை செய்தி குறிப்பு
புதுக்கோட்டை மாவட்ட பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் காலியாக உள்ள மூன்று இடைநிலை ஆசிரியர் பணியிடம் மதிப்பூதியம் அடிப்படையில் நிரப்பிட தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பித்திட திருமதி. ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் புதுக்கோட்டையில் செயல்ப்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியில் மதிப்பூதியம் அடிப்படையில் மூன்று இடைநிலை ஆசிரியர் பணியிடம் ரூ12000/- என்ற மதிப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது. காலியாக உள்ள மூன்று இடைநிலை ஆசிரியர் பதவிக்கு Diploma in teacher education D.T.Ed., Junior Diploma in Teaching the (Blind) Visually Impaired J.D.T.B. or Special Education D.Ed. (இடைநிலை ஆசிரியருக்கான பட்டய ஆசிரியர் பயிற்சி மற்றும் பார்வைத்திறன் குறையுடையோருக்கு கற்பிற்கும் இளநிலை ஆசிரியர் பட்டய பயிச்சி அல்லது சிறப்பு ஆசிரியர் பட்டய பயிச்சி) முடித்திருக்க வேண்டும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தப்படும் TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் மேற்கண்ட பதவிகளுக்கு ஆசிரியர்தேர்வு வாரியத்தின் வாயிலாக நடத்தப்படும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இல்லையெனில் பள்ளிக்கல்வித் துறையின் வாயிலாக நடத்தப்பெறும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சுய விண்ணப்பத்துடன் கல்விச்சான்று, சாதிச்சான்று, குடும்ப அட்டையின் நகல், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையின் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் தலைமை ஆசிரியர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில், புதிய பேருந்து நிலையம், புதுக்கோட்டை- 622001 என்ற முகவரிக்கு 12.01.2024 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஐ.சா.மெர்சி ரம்யா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்