தூரிகை (மாணவர் இதழ் 24) 1.ஆகஸ்ட்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
பிறந்திருக்கும் புதிய மாத்த்தில் உங்களுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் உற்றுநோக்குங்கள். உங்கள் சிந்தனைகளை நல்வழிப்படுத்தும் முயற்சியைத் துவங்குங்கள்.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் 11 செய்நன்றி அறிதல் குறள் எண் 1
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
விளக்கம்: நாம் பிறருக்கு எந்த உதவியும் செயாதபோதும், நமக்கு அவர்கள் செய்யும் உதவிக்கு இந்த மண்ணுலகையும் விண்ணுலகையும் கொடுத்தாலும் ஈடாகாது.
***
சரித்திர வியாழன்: - அசோக மன்னர்:
அசோகர் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும்.[1] கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். புத்த மதத்தை ஆசியா முழுவதும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள் கட்டினார். இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராகக் கருதப்படுகிறார். இவர் தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராக பணியாற்றினார். அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் மலைத் தொடரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார். தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இந்திய ஒன்றியப் பகுதிகளையும் இவர் ஆட்சி செய்துள்ளார். இவரின் மாகாண தலைநகரங்களாக தக்சசீலா மற்றும் உஜ்ஜைனி இருந்தன.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - வரளாற்றுப் பகுதி:
மன்னர் அசோகர் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்?
***
சிந்தனைக்கீற்று:
No pain, no gain.
வலி இல்லாமல் வளர்ச்சி இல்லை.
***
செய்திகள்:
***
  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.