தூரிகை (மாணவர் இதழ் 25) 2.ஆகஸ்ட்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
திருக்குறளை அடி பிரித்து எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அதுதான் செய்யுள் பகுதிகளைப் பிரித்துப் படிக்கப் பழகுவதன் துவக்கம்.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் 11 செய்நன்றி அறிதல்
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
விளக்கம்: உற்றகாலத்தில் ஒருவருக்குச் செய்யும் உதவி, இந்த உலகத்தை விடவும் மிகப்பெரியதாகும்.
***
இசை வெள்ளி: - அழ. வள்ளியப்பா
2. ஒன்று சேர்தல்

கூட்டம் கூட்ட மாகவே

குருவி பறந்து சென்றிடும்.

குவியல் குவிய லாகவே

கொட்டிக் கற்கள் கிடந்திடும்.

கூறு கூறாய்ச் சந்தையில்

கொய்யாப் பழங்கள் விற்றிடும்.

குலைகு லையாய்த் திராட்சைகள்

கொடியில் அழகாய்த் தொங்கிடும்.

வரிசை வரிசை யாகவே

வாழை தோப்பில் நின்றிடும்.

மந்தை மந்தை யாகவே

மாடு கூடி மேய்ந்திடும்.

சாரை சாரை யாகவே

தரையில் எறும்பு ஊர்ந்திடும்.

நேரில் தினமும் பார்க்கிறோம்

நீயும் நானும் தம்பியே!
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - சுற்றுலா பகுதி:
இந்தியாவின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள நகரம் எது?
விடை: கன்னியாகுமரி
***
செய்திகள்:
முத்தலாக் மசோதா: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
***
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக எம்.பி.க்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று ஆலோசனை நடத்தினார்.
***
புதிய மசோதா நிறைவேறியதால், சாலை விதிமீறல் அபராதங்கள் பல மடங்கு உயர்த்தப்படுகின்றன.
***
ஐ.நா. பொது அவையில் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
 ----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.