தூரிகை (மாணவர் இதழ் 27) 6.ஆகஸ்ட்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
சிந்தனைச் செவ்வாய் பகுதியில் புத்தரின் சிந்தனைகள் தரப்பட்டுள்ளன. படித்து அதனை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.
***
நாளொரு குறட்பா: அதிகாரம் 11 செய்நன்றி அறிதல் குறள் எண் 4
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
விளக்கம்: தினையளவாக ஒருவர் செய்த சிறிய நன்மையை, அதன் பயன் அறிந்தவர்கள் பனையளவு எனக் கொண்டாடுவர்.
***
சிந்தனைச்செவ்வாய்: - புத்தர்
மனமே எல்லாம். நீ எதை நினைக்கிறையோ, அதாகவே ஆவாய்.
கடந்த காலத்தில் மூழ்கி இராதே. எதிர்காலம் குறித்த கனவு வேண்டாம். நிகழ்காலத்தில் கவனமாயிரு.
மூன்று பொருட்களை வெகுநாட்களுக்கு மறைக்க முடியாது. சூரியன், நிலா, உண்மை.
உடல்நலம் என்பது மிகப்பெரிய அன்பளிப்பு. மனநிறைவே சிறந்த செல்வம். நம்பிக்கையே சிறந்த உறவு.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - இலக்கியப் பகுதி:
மகாபாரதத்தை வடமொழியில் இயற்றியவர் யார்?
விடை: வியாசர்.
***
சிந்தனைக்கீற்று:
Help to live and live to help.
வாழ உதவு, உதவுவதற்காகவே வாழ்.
***
செய்திகள்:
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சாசனப் பிரிவு 370 நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
***
இரண்டு யூனியன் பிரதேசங்களாகிறது ஜம்மு & காஷ்மீர்!
***
370 நீக்கத்திற்கு அதிமுக ஆதரவு!
***
காஷ்மீரில் வெளியூர் பத்திரிகையாளர்களுக்கு தடை!
  ----------

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.