அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய தூரிகையின் கதையைக் கவனமாகப் படியுங்கள். உண்மையும் நேர்மையும்
மனதிற்குத் தரும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்பதை உணர்வீர்கள்.
***
நாளொரு குறட்பா:
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
விளக்கம்: இவனுக்கு நாம் உதவி செய்தால், நமக்கு இந்த பயன் கிடைக்கும் என்று எண்ணாமல்,
அன்பால் செய்யும் உதவியின் நன்மை கடலைவிடப் பெரியதாகும்.
***
கதைத்திங்கள்: - நாணயஸ்தன்
முன்னொரு காலத்தில் குருவாயூரப்பன்
என்னும் வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் ஊர் ஊராக சென்று பழைய பழைய ஈயம் பித்தளை
பொருட்களை வாங்கி வந்து நகரத்தில் இருக்கும் மொத்த கடைகளில் போட்டு பணம்
பெற்றுக்கொள்வான். அவன் செல்லும் இடங்கள் அனைத்தும் கிராமங்களாக இருந்ததால்
அதிகமாக பொருட்கள் கிடைப்பது கடினமாக இருந்தது. இருந்தாலும் அவன் வாழ்க்கையும்
வறுமையில்தான் ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு முறை
பக்கத்து ஊர் சென்று இவன் எப்பொழுதும் பழைய சாமான்கள் சேகரிக்கும் ஒரு வீட்டில்
போய் பழைய பொருட்கள் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்டான்.
இவன் கேட்ட வீடு ஒரு காலத்தில் நல்ல செல்வத்துடன் வாழ்ந்தவர்கள், இப்பொழுது எல்லாம் கரைந்து போய் விட்டது. அவர்கள் வீட்டில் இரு
குழந்தைகளுடன் அதன் தாய் வறுமையில் வசிக்கிறாள். அந்த தாய் பாவம் வீட்டில்
இருக்கும் தட்டு முட்டு சாமான்களை விற்று அதில் வரும் வருமானத்தில்தான் பிழைப்பு
நடத்துகிறாள்.
அதனால் பாவம்
இப்பொழுது அவர்கள் வாழ வழியின்றி ஒவ்வொரு பொருளாக இவனிடம் கொடுத்து, இவன் நாணயமாய் கொடுக்கும் பணத்தில்தான் அவர்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
இவனுக்கு மனசு கஷ்டமாக இருந்தாலும் என்ன செய்வது? இவனும் அவர்கள் கொடுக்கும் பழைய பொருட்களில் தான் ஜீவனம் நடத்தியாக
வேண்டுமே ?
அந்த வீட்டிற்கு ஒரு முறை போய் ஏதாவது
பழைய பொருள் இருக்கிறதா? என்று கேட்டான். அந்த பெண் பரிதாபமாய்
அவனை பார்த்து உன்னிடம் போடுவதற்கு இப்பொழுது ஒன்றுமே இல்லை, ஒரு காலத்தில் இவங்க தாத்தா சாப்பிட்ட பழைய சாப்பாட்டு தட்டு ஒண்ணு
கிடக்கு, அதுவும் வளைஞ்சு நெளிஞ்சு கிடக்கு,
அதைய நீ எடுத்துட்டு எங்களுக்கு ஏதாவது
கொடுத்துட்டு போ, இரண்டு நாள் சாப்பாட்டுக்கு நிம்மதியா
இருக்கலாம், வருத்தத்துடன் சொல்லியவாறு அந்த தட்டை
கொண்டு வந்து கொடுத்தாள்.
குருவாயூரப்பன் அந்த தட்டை வாங்கி
பார்த்தான், மிகவும் பழையதாய், அழுக்காய் இருந்தது அந்த தட்டு. வாங்கி அதை நன்கு துடைத்து
பார்த்தான், எவ்வளவு போகும் ? சந்தேகம் வர மீண்டும் துடைத்து பார்த்தான். இவன் இப்படி அடிக்கடி
துடைத்து துடைத்து பார்த்து ஏதோ யோசிப்பது போல நிற்பதை கண்ட அந்த வீட்டுப்பெண்
தம்பி இந்த தட்டு உனக்கு எதுக்கும் உதவாதுன்னாலும், எங்களுக்கு உதவி பண்னறதுக்காகவாவது ஏதாவது கொடுத்துட்டு போ !
பரிதாபமாய் சொன்னாள்.
குருவாயூரப்பன், அம்மா இப்ப என்னால் எதுவும் சொல்ல
முடியாது, இப்போதைக்கு என் கிட்டே கொஞ்சம்
பணம்தான் இருக்கு, இந்தாங்க என்று அவள் கையில் கொடுக்க
அந்த பெண்ணுக்கு அந்த பணமே அதிகமாக தெரிய தம்பி..இதுவே அதிகம்,என்று மனநிறைவுடன் பெற்றுக்கொண்டாள்.
குருவாயூரப்பன்
எதுவும் பேசாமல் நகரத்துக்கு விரைந்தான். அங்கு அவனுக்கு நன்கு தெரிந்த ஒரு நகை ஆசாரியை
பார்த்தான். அவரிடம் அந்த தட்டை காண்பிக்க அவர் எடுத்து பார்த்து அப்பா… இது சுத்த தங்கம்..வாயை பிளந்தார். இருவரும் அங்கிருந்த பெரிய நகை
கடைக்கு சென்று இதனை காண்பித்து அந்த குடும்பத்து விவரத்தையும் சொன்னான்
குருவாயூரப்பன். உடனே நகை கடைக்கார்ர் அந்த பெண்ணை கூட்டி வர சொன்னார். வாகன
வசதியும் கொடுத்தார். குருவாயூரப்பன் விரைந்து சென்று அந்த பெண்னையும், அவர்கள் குழந்தைகளையும் கூட்டி வந்தான்.
கடைக்காரர் அந்த பெண்ணிடம் அம்மா…இந்த தட்டு மாதிரி ஏதாவது உங்க கிட்டே இருக்கா? என்று கேட்டார். இல்லைங்க ஐயா, இது எங்கேயோ கிடந்துச்சு, நான்தான் அதை
பொறுக்கி எடுத்து வச்சு இவர்கிட்ட கொடுத்தேன்.
அம்மா இது சுத்த தங்கம், இதுக்கு மதிப்பு குறையாம அஞ்சு லட்சம் ரூபாய்க்கு இருக்கு. நான்
உங்களுக்கு பணமா கொடுத்துடவா?
அந்த பெண்
குருவாயூரப்பனை பார்த்து தம்பி, நீதான் என்ன பண்ணறதுன்னு சொல்லணும்?
குருவாயூரப்பன் ஐயா, இந்த பொண்ணு, குழந்தைங்க பேர்ல இந்த பணத்தை பேங்க்ல டிபாசிட் பண்ணி கொடுத்திடுங்க,
அவங்களுக்கு அதுல இருந்து மாசாமாசம் வட்டி
வரும், அதை வச்சு இவங்க வாழ்க்கையை நடத்திக்குவாங்க..என்று
சொன்னான். நகை கடைக்காரர் குருவாயூரப்பனை கட்டிக்கொண்டு உன்னைய மாதிரி நாணயஸ்தன்
எங்கேயும் கிடைக்க மாட்டான், என்று சொல்லி அவர்கள் மேனேஜரை அழைத்து
பக்கத்தில் உள்ள ஒரு வங்கிக்கு அழைத்து சென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து தர
சொன்னார்.
அதற்கு பின் குருவாயூரப்பனையும்,
அந்த ஆசாரியையும் அழைத்து தம்பி இந்தாருங்கள்,
உங்களுக்கு என்னால் முடிந்த அன்பு பரிசு என்று
கொஞ்சம் பணம் கொடுத்தார். குருவாயூரப்பன், அதை வாங்க
மறுத்தான், இல்லை ஐயா அந்த பொருள் என்னுடையது
இல்லையே? என்றவனிடம் தம்பி நான் கொடுத்தது
பொருளுக்கில்லை, உன் நாணயத்துக்கு. நீ நினைச்சிருந்தா
இது என்னுதுன்னு சொல்லி எங்கிட்டே பணத்தை வாங்கியிருக்கலாம், ஆனா அந்த குடும்பத்தை கூட்டிகிட்டு வந்து அவங்களுக்கு ஒரு
வருமானத்துக்கு வழியும் காண்பிச்சிருக்கியே அதுக்குத்தான்.
நன்றி கூறி அந்த தொகையை பெற்றுக்கொண்டு
அங்கிருந்து விடை பெற்றான்.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - கலைப்பகுதி
மேகதூதம் என்ற நூலை இயற்றியவர் யார்?
மகாக்கவி காளிதாசர்.
***
சிந்தனைக்கீற்று:
“Activity is the only road to knowledge.”
செயல்படுதலே அறிவை அடையும் வழி.
***
செய்திகள்:
இன்று வேலூரில் மக்களவைத் தேர்தல்.
***
வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் செயலிகளின் பெயரை மாற்ற ஃபேஸ்புக் நிறுவனம்
திட்டமிட்டுள்ளது.
***
வாகன விற்பனை துறையில் கடந்த மூன்று
மாதங்களில் இரண்டு லட்சம் பேர் வேலைகளை இழந்துள்ளதாக இந்திய வாகன டீலர்கள் சங்கம்
தெரிவித்துள்ளது.
***
குடும்பத்தால் அல்ல, பாஜக சித்தாந்தத்தால்
வளர்ந்த கட்சி என மோடி பேச்சு.
----------பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.