தூரிகை (மாணவர் இதழ் 31) 13.ஆகஸ்ட்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
சிந்தனைச் செவ்வாயில் விவேகானந்தரின் சிந்தனைகளைப் படித்துப் பயன்பெறுங்கள்.

***நாளொரு குறட்பா: - அதிகாரம் செய்நன்றி அறிதல் குறள் எண் 8
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
விளக்கம்: ஒருவர் செய்த நன்மையை நாம் மறக்கக்கூடாது. ஆனால், ஒருவர் செய்த தீமையை அன்றே மறந்துவிடுவது நமக்கு நன்மை பயக்கும்.
***
சிந்தனைச் செவ்வாய்: - விவேகானந்தர்:
உடலைப் பாதுகாக்காமல் ஆன்மாவைப் பேண முடியாது.
நூறு இளைஞர்களை என்னிடம் தாருங்கள். இந்தியாவை முன்னேற்றிக் காட்டுகிறேன்.
இளைஞனே! உன்னால் எல்லாம் முடியும் என்று நம்பு.
நீ தூய்மையானவனாக உன்னை வலிமைப்படுத்திக்கொள்.
இந்த உலகம் ஒரு பயிற்சிக்கூடம். நாம் பயிற்சி எடுத்துக்கொண்டு நம்மை வலிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - இலக்கியப்பகுதி:
திருமந்திரத்தை இயற்றியவர் யார்?
விடை: திருமூலர்.
***
சிந்தனைக்கீற்று:
A cat may look at a king.
யானைக்கொரு காலம் வந்தால், பூனைக்கொரு காலம் வரும்.
***
செய்திகள்:
கேரளாவில் பெய்துவரும் கனமழை, நிலச்சரிவால் புதுமலை என்ற கிராமமே இருந்த இடம் தெரியாமல் அழிந்துபோயுள்ளது.
***
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளார்.
***
காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷாவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
***
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு: கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.
 

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.