அன்ன்பு மாணவச் செல்வங்களே!
இன்று நமது தென்னாட்டு தந்தை, பகுத்தறிவுப் பகலவன் ஐயாவின் 141 ஆவது
பிறந்தநாளில், தூரிகை அவருக்கு வணக்கம் செலுத்துகிறது. அவரின் சிந்தனைகள், முன் எப்போதையும்
விட
இப்போதுதான் நமக்குத் தேவையாக இருக்கிறது.
***
நாளொரு குறட்பா: பொறையுடைமை:
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை
விளக்கம்: தன்னைத் தோண்டுபவரையும் தாங்கி நிற்கிற பூமியைப்போல, தன்னை இகழ்ந்து
பேசுபவரைப் பொறுப்பது தலையாய கடமையாகும்.
***
சிந்தனைச் செவ்வாய்: பெரியார்:
உன் சாத்திரத்தை விட, உன் முன்னோரை விட, உன் வெங்காயம் வெளக்கமாத்தை விட உன்
அறிவு பெரிது அதை சிந்தி..
சர்வ சக்தி உள்ள கடவுள் ஒருவர்
இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க முடியும்சர்வ சக்தி
உள்ள கடவுள் ஒருவர் இருந்தால் கடவுள் இல்லை என்பவர்கள் எப்படி உலகத்தில் இருக்க
முடியும் வாழ்க்கையின் லட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற்றுவது
அறிவுள்ளவர்க்கு அறிவின் செயல்
அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல்.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: இலக்கியப்பகுதி:
பெரியார் எரிக்க வேண்டும் என்று சொன்ன சைவ இலக்கியம் எது?விடை:
பெரியபுராணம்
***
சிந்தனைக்கீற்று:
Not annoying others in any way is the best moral life.
சிறந்த ஒழுக்க வாழ்வு என்பது, பிறருக்கு எந்தவகையிலும் தொந்தரவின்றி
வாழ்வது.
***
செய்திகள்:
ஆந்திராவில் படகு கவிழ்ந்து இருபதுக்கும் மேற்பட்டவர்கள் மரணம்.
***
“கோட்சே வெறும் கருவி மட்டும்தாண்” நடிகர்
சூரியா பேட்டி.
***
முதியோருக்கான ஓய்வூதியத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி.
***
பாலியல் வழக்குகளுக்கு ஓராண்டில் தீர்வுகாண புதிதாக 1023 சிறப்பு
நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளிபுதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in
No comments:
Post a Comment
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.