தூரிகை (மாணவர் இதழ் 60) 22.அக்டோபர்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
இனிவரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இலக்கியம் அறிவோம் பகுதி. படித்துப் பயன்பெறுங்கள்.
 நாளொரு குறட்பா: - அடக்கம் உடைமை:
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
விளக்கம்: உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.
சிந்தனைச் செவ்வாய்: இலக்கியம் அறிவோம்:
2000 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட கவிதைகளை நாம் சங்க இலக்கியங்கள் என்கிறோம். அதாவது, அந்தக் கவிதைகள் எழுதப்பட்ட காலம் சங்க காலம் என்றழைக்கப்படுகிறது.
சங்க இலக்கியங்கள் எனப்படுபவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வகைப்படுத்தப்பட்டுல்ளன.
இந்த இலக்கியங்கள், சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு தமிழர் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. சுமார் 473 புலவர்கள் பாடிய 2183 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பாகும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - இலக்கியப்பகுதி:
சங்க இலக்கியம் என்பது மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
சிந்தனைக்கீற்று:
Don’t make slave, don’t be slave.
எவரையும் தாழ்த்தாதே, எவருக்கும் தாழாதே.
செய்திகள்:
நாங்குநேரி: தேர்தல் புறக்கணிப்பில் 113 கிராமங்கள்!
அரசியலமைப்பின்படி செல்லுங்கள்: அயோத்தி வழக்கில் முஸ்லீம்கள்! .. வேண்டுகோல்.
மகராஷ்டிர தேர்தலில் வேட்பாளர் மீது தாக்குதல், கார் தீ வைப்பு!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேரின் குடும்பத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று புதிய வீடுகளை வழங்கினார்.
 

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.