தூரிகை (மாணவர் இதழ் 61) 23.அக்டோபர்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய தகவல் புதனில் சகாரா பாலைவனம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
நாளொரு குறட்பா: அடக்கம் உடைமை:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
விளக்கம்: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.
தகவல் புதன்: - சகாரா பாலைவனம்:
மிகப் பெரிய வெப்பப் பாலைவனம் சஹாரா. அண்டார்டிகா, ஆர்க்டிக் குளிர்ப் பாலைவனங்களுக்கு அடுத்து மூன்றாவது பெரிய பாலைவனம் சஹாரா.

11 நாடுகளில் பரந்து விரிந்திருக்கிறது சஹாரா. ஆண்டுக்கு 3 அங்குலத்துக்கும் குறைவான மழையே பெய்கிறது. சில இடங்களில் மழையே பெய்வதில்லை.

சஹாராவில் சுமார் 500 வகைத் தாவரங்களும் 70 வகை விலங்குகளும் வசிக்கின்றன. சஹாராவின் நீர்நிலைகளுக்கு அருகே சுமார் 20 லட்சம் மனிதர்களும் வாழ்கிறார்கள்.
 பொது அறிவுப் பொக்கிஷம்: அறிவியல் பகுதி:
ரத்தத்திலுள்ள சுவாச நிறமி எது?
விடை: ஹீமோகுலோபின்
சிந்தனைக்கீற்று:
the world is a stage.
உலகமே ஒரு நாடகமேடை.
செய்திகள்:
சிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமீன்: தொடர்கிறது  விசாரணை!
ஏழு பேருக்காக ஆளுநரை வற்புறுத்த முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
தனியார் ரயில் தாமதம்: பயணிகளுக்கு இழப்பீடு!
தமிழகத்தில் அதிகரிக்கும் முதியவர்கள் மீதான தாக்குதல்கள்! ...
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.