தூரிகை (மாணவர் இதழ் 24) 1.ஆகஸ்ட்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
பிறந்திருக்கும் புதிய மாத்த்தில் உங்களுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் உற்றுநோக்குங்கள். உங்கள் சிந்தனைகளை நல்வழிப்படுத்தும் முயற்சியைத் துவங்குங்கள்.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் 11 செய்நன்றி அறிதல் குறள் எண் 1
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
விளக்கம்: நாம் பிறருக்கு எந்த உதவியும் செயாதபோதும், நமக்கு அவர்கள் செய்யும் உதவிக்கு இந்த மண்ணுலகையும் விண்ணுலகையும் கொடுத்தாலும் ஈடாகாது.
***
சரித்திர வியாழன்: - அசோக மன்னர்:
அசோகர் மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும்.[1] கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். புத்த மதத்தை ஆசியா முழுவதும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள் கட்டினார். இந்தியாவை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராகக் கருதப்படுகிறார். இவர் தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராக பணியாற்றினார். அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் மலைத் தொடரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார். தற்கால இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இந்திய ஒன்றியப் பகுதிகளையும் இவர் ஆட்சி செய்துள்ளார். இவரின் மாகாண தலைநகரங்களாக தக்சசீலா மற்றும் உஜ்ஜைனி இருந்தன.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - வரளாற்றுப் பகுதி:
மன்னர் அசோகர் எந்த வம்சத்தைச் சேர்ந்தவர்?
***
சிந்தனைக்கீற்று:
No pain, no gain.
வலி இல்லாமல் வளர்ச்சி இல்லை.
***
செய்திகள்:
***
  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 23) 31.ஜூலை.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
இன்று மாதத்தின் இறுதிநாள். இந்த மாதத்தைச் சற்று பின்நோக்கி நினைவுகூருங்கள். புதிதாக இந்த மாதத்தில் என்ன கற்றுக்கொண்டீர்கள் எனச் சிந்தியுங்கள்.
 ***
நாளொரு குறட்பா: - அதிகாரம் 10 இனியவைகூறல் குறள் எண் 10
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
விளக்கம்: இனிய சொற்கள் இருக்கின்றபோது, நாம் கடுஞ்சொற்களைக் கூறுவது, மரத்தில் இருக்கிற கனியை விட்டுவிட்டுக் காயைப் புசிப்பதாகும்.
***
தகவல் புதன்: - ஜூலை 29 சர்வதேச புலிகள் தினம்:
இந்தியாவின் தேசிய விலங்கான புலிகளை பாதுகாக்கவும், அவற்றின் எண்ணிக்கையை பெருக்கவும் உலக அளவில் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்திய வனப்பகுதிகளில்தான் புலிகள் அதி கம் வாழ்கின்றன. அதேநேரம் வனப்பகுதிகள் சுருங்கி வருவதால் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் அவை புகும் சூழல் அதிகரித்து வருகிறது.
வனத்தில் புலி வாழ்கிறது என்றால், அங்கு அவற்றுக்கு தேவையான உணவு, தண்ணீர், பாதுகாப்பு, சுற்றித் திரிவதற்கான பரந்த இடம் இருக்கிறது என்பதை உணரலாம். புலிகள் வாழும் வனப்பகுதி செழுமை நிறைந்த காடுகள் இருப்பதற்கான அறிகுறி ஆகும்.
இந்தியாவில் 2010-ம் ஆண்டில் 1,706 புலிகள் இருந்தன. 2014-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட வனத் துறை கணக் கெடுப்பின்படி அவற்றின் எண்ணிக்கை 2,226 ஆக உயர்ந்தது. உலகில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை 3,890 ஆகும். இந்தியாவில் உள்ள வனப்பகுதிகளில்தான் புலிகள் அதிகம் வசிக்கின்றன. புலிகளின் நடமாட்டம், அவற்றின் எண்ணிக்கை, வாழ்வியல் முறைகளை அறிந்துகொள்ளும் பொருட்டு வனங்களில் நவீன கேமராக்களை கடந்த 2018-ம் ஆண்டு இந்திய வன உயிரின நிறுவனம் நிறுவியது.
இந்தியாவில் அதிகபட்சமாக உத்தர காண்டில் 340 புலிகள் உள்ளன. கர்நாடகா, கேரள வனப்பகுதிகளும் புலிகள் வாழ்வதற்கு ஏற்ற இடங்களாகும். புலிகள் அதிகமாக வாழும் மாநிலங்களில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. 2014-ம் ஆண்டு வனத் துறை வெளியிட்ட புள்ளி விவரத்தில் தமிழகத்தில் உள்ள வனப்பகுதிகளில் 229 புலிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம் விரைவில் வெளியிடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் புலிகளின் எண்ணிக்கை 250-ஐ தாண்டியுள்ளதாக புலிகள் பாதுகாப்பு நிறுவனம் உறுதிசெய்துள்ளது.
தமிழகத்தில் களக்காடு முண்டந்துறை, சத்தியமங்கலம், முதுமலை, ஆனைமலை ஆகிய வனப்பகுதிகளில் புலிகள் காப்பகம் செயல்பட்டு வருகின்றன. தமிழக வனப்பகுதிகளில் புள்ளிமான், கலைமான், காட்டெருமை அதிகளவில் இருப்பதால்தான், புலிகள் எண்ணிக்கை பெருகி வருகிறது.
வனப்பகுதிகளில் மனித நடமாட்டம் அதிகரித்தல், வனங்கள் சுருங்குதல் ஆகிய காரணங்களால் அடிக்கடி மனிதன் வாழும் பகுதிக்குள் புலிகள் புகுந்து கால்நடைகளை தாக்குகின்றன. இதனால் மனிதன், புலிகள் இடையே மோதல் ஏற்படுகிறது. நாளுக்கு நாள் வனப்பகுதிகள் சுருங்கி வரும் நிலையில் வசிப்பிடங்களின்றி புலிகள் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.
எனவே, வனப்பகுதிகளை அழியாமல் பாதுகாத்தால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என, தேசிய புலிகள் பாதுகாப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - அறிவியல் பகுதி:
டைனமோவைக் கண்டறிந்தவர் யார்?
விடை: மைக்கேல் பாரடே
 ***
சிந்தனைக்கீற்று:
Truth may sleep, never die.
உண்மை உறங்கலாம், மறிப்பதில்லை.
  ***
செய்திகள்:
அமமுகவில் இருந்து விலகுகிறார் நடிகர் ரஞ்சித்
***
புகை மாசு: 5,645 எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்க மத்திய அரசு அனுமதி.
***
புதிய கல்விக் கொள்கை: அறிக்கை சமர்ப்பித்தது திமுக!
***
மாநிலங்களவையில் தாக்கலானது முத்தலாக் தடை சட்ட மசோதா
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 22) 30.ஜூலை.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
நேற்றைய தூரிகையின் புதிய வடிவமைப்பு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என நம்புகிறோம். தொடர்ந்து இனிவரும் தூரிகைகளும் இதுபோல புதுப்புது மாற்றங்களோடு வெளிவரும். படித்துப் பயன்பெறுங்கள்.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் 10 இனியவைகூறல் குறள் எண் 5
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்று பிற.
விளக்கம்: பணிவுடைய இனிமையான சொற்களைப் பேசுவதே ஒருவனுக்கு சிறந்த அணிகலனாம். மற்றவை அணிகலன் ஆகாது.
***
சிந்தனைச் செவ்வாய்: - காந்தி:
உண்மையையும், அகிம்சையையும் கைக்கொண்டு, தேச விடுதலைக்காகப் பாடுபட்ட மஹாத்மா காந்தியடிகள் அவர்கள், இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். அவருடைய சிந்தனைகள் சில இங்கே:
-> மற்றவர்கள் உங்களிடம் எப் படி நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதேபோல  மற்றவர்களிடம் நீங்கள் நடந்து கொள்ளுங்கள்.

->  அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளாதவர்கள் உடல் நலமுடன் இருக்க முடியாது.

-> நீங்கள் உண்ணும் உணவே அருமருந்தாகும்.

-> சாப்பிட வேண்டுமா, வேண்டாமா என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பம் ஏற்பட்டால் உண்ணாமல் இருப்பதே சிறப்பு.

-> சிறுநீரைக் கழிக்க வேண்டாமா, அடக்கி வைக்கலாமா என்ற தயக்கம் ஏற்படும்போது, சிறுநீரை வெளியேற்றுவதே உடல் நலனுக்கு உகந்தது.

-> சாப்பிடும் போது மௌனத்தை கடைபிடியுங்கள்.

-> எதிர்மறையான எண்ணங்கள் வேண்டாமே, ஆக்கபூர்வமான எண்ணங்களையே உரமிட்டு வளர்த்துக்  கொள்ளுங்கள்.
 
-> எந்தச் சூழ்நிலையிலும் ஏமாற்றத்திற்கு இடம் தராதீர்கள்.
***
பொதுஅறிவு பொக்கிஷம்: - இலக்கிய பகுதி:
நாளடியார் நூலை இயற்றியவர்கள் யார்?
விடை: சமண முனிவர்கள்
***
சிந்தனைக்கீற்று:
self help is the best help
தன் கையே தனக்குதவி.
***
செய்திகள்:
கர்நாடக சட்டமன்றத்தில் (ஜூலை 29) முதல்வர் எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்.
***
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகச் சிறப்பு வகுப்புகளுக்கு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
***
"மாணவர்களின் வன்முறைக்குத் திரைத்துறையினரே காரணம்" - தமிழிசை பேட்டி.
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 21) 29.ஜூலை.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ஆகிய வகைக் கணக்குகளை வகுப்பில் மட்டுமின்றி பிற நேரங்களில் நீங்களே உங்களுக்கு ஒரு கணக்கு கொடுத்து விடைதேடிப் பாருங்கள். நிச்சயம் உங்களுக்குள் அபாரமான கணித ஆற்றல் மலரும்.
***
நாளொரு குறட்பா:- அதிகாரம் 10 இனியவைகூறல் குறள் எண் 10
அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொல நாகப் பெறின்.
விளக்கம்: முகமலர்ச்சியோடு கூறப்படும் இனிய சொல், மனமகிழ்வோடு பொருளைத் தருவதினும் மேம்பட்டது.
***
கதைத் திங்கள்: - வழிப்போக்கன் சொன்ன பாடம்:
காட்டின் வழியே ஒரு பயணி தன் குதிரையில் போய்க்கொண்டிருந்தான். அப்போது அவன் சென்ற வழியில் ஒருவன் உயிருக்குப் போராடியபடி, துடித்துக் கொண்டிருந்்தவனாக கீழே கிடந்தான்.
வழிப்போக்கன் தனது குதிரையில் இருந்து இறங்கி அவனுக்கு உதவச் சென்றான். துடித்துக்கொண்டிருந்தவன் திடீரென வழிப்போக்கனின் மீது பாய்ந்து, அவனை கீழே தள்ளிவிட்டு குதிரையைக் கைப்பற்றினான்.
அப்போது கீழே விழுந்து கிடந்த வழிப்போக்கன் இந்த நிகழ்வை யாரிடமும் சொல்லிவிட வேண்டாம் என அந்தத் திருடனைக் கேட்டுக்கொண்டான். அதற்கு அந்தத் திருடன், "ஏன் அவமானமாக இருக்கிறதா" எனக்கேட்டான்.
"அப்படி இல்லை, இந்த நிகழ்வு மக்களுக்குத் தெரிந்தால், இன்னொரு நாளில் உண்மையிலேயே ஒருவர் இந்தக் காட்டு வழியில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்தாலும், யாரும் உதவாமல் சென்றுவிடுவார்கள்" என்றான் வழிப்போக்கன். அந்த பதிலைக் கேட்டு அவமானத்தால் தலைகுணிந்த திருடன் குதிரையை அவனிடமே ஒப்படைத்துச் சென்றான்.
 ***
பொது அறிவுப் பொக்கிஷம்: கலைப்பகுதி:
தமிழ் நாடகத் தந்தை யார்?
விடை: பம்மல் K. சம்பந்தனார்.
***
சிந்தனைக் கீற்று:
even homer nods.
யானைக்கும் அடி சருக்கும்.
 ***
செய்திகள்:
தமிழும் சமஸ்கிருதமும் இரு கண்கள் போன்றவை என்று தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
***
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி நேற்று காலமானார்!
***
மாநிலங்களவையில் தான் கேள்வி எழுப்பியபோது பிரதமர் மேஜையைத் தட்டி வரவேற்றது நெகிழ்ச்சியைத் தந்தது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
***
கர்நாடகம் போல ஆட்சி கவிழும்: ஸ்டாலின் பேட்டி.
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

contraction usage

write the below words to use contractions.

Fear
Test
Flying
Table
Chalk
Machine
Catch
Ghost
Night
Rough
Shelf
Fashion
Fish
Thunder
Method
Health
White
Whole
Whale
Education
Dedication
Stopped
Error
Permanent
Sweeper
Outside
Doubt
Downpour
Own
Vowel
Window

 

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in