தூரிகை (மாணவர் இதழ் 55) 23.செப்டம்பர்.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய கதைத்திங்களில் உங்களுக்காக மிகச் சுவாரசியமான கதை ஒன்று காத்திருக்கிறது. கவனமாகப் படியுங்கள்.
***
நாளொரு குறட்பா: அதிகாரம் ஆள்வினை உடைமை
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
விளக்கம்: முயற்சி செல்வத்தைக் கொடுக்கும். முயற்சி இன்மை வறுமையைப் பரிசளித்துவிடும்.
***
கதைத்திங்கள்: குறும்பும் சைக்கிளும் 
 உதயசங்கர் 
அப்படி என்னதான் குறும்பு செய்வார்கள்? இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டே இருப்பார்கள். காரணத்தைக் கேட்டால் எல்லோருக்கும் சிரிப்பாக இருக்கும். யார் முதலில் குளிப்பது, யார் முதலில் அம்மாவைத் தொடுவது, யார் எவ்வளவு தூரத்துக்குப் பந்தைத் தூக்கி எறிவது, ஒருவரின் பென்சிலை ஒளித்து வைப்பது, அப்பாவின் பைக்கில் ஏறிக்குதித்து விளையாடுவது, அம்மா வளர்க்கும் மீன்களுக்குத் தீனி போடுவது, சாப்பிடாமல் அம்மாவை அலைக்கழிப்பது என்று எண்ணற்ற குறும்புகளைச் செய்வார்கள். உறங்கும்போது மட்டும்தான் கொஞ்சம் அமைதியாக இருப்பார்கள். அப்போதும் ஒருவரை ஒருவர் மிதித்துக்கொண்டோ, காலை மேலே தூக்கிப் போட்டுக்கொண்டோ இருப்பார்கள்.
இரண்டு பேரும் உருவத்தில் ஒரே மாதிரி இருப்பார்கள். யாராலும் தனித்தனியாக அடையாளம் காண முடியாது. ஒருவரை இன்னொருவர் குற்றம் சொல்வார்கள். வீட்டிலும் வெளியிலும் ஓர் இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் ஓடுகிற வழியில் இருக்கும் பொருட்கள் எல்லாம் அவ்வளவுதான். பள்ளிக்கூட்த்தில் மட்டும் அமைதியாகக் குறும்பு செய்வார்கள். சக மாணவர்களின் பைகளை மாற்றி வைத்துவிடுவார்கள். கரும்பலகை அழிப்பானை ஒளித்து வைத்துவிடுவார்கள். பிறர் கொண்டுவரும் மதிய உணவை ருசி பார்த்துவிடுவார்கள்.
தினமும் வீட்டுக்குப் புகார் வந்துகொண்டே இருக்கும். அப்பாவுக்கு இந்த வயதில் குழந்தைகள் குறும்புகள் செய்வது இயற்கைதான் என்று தெரியும். ஆனால், சூரியனும் சந்திரனும் செய்கிற குறும்புகள் கொஞ்சம் அளவுக்கு அதிகம் என்று தோன்றியது. எப்படி இதைக் கட்டுப்படுத்துவது என்று யோசித்தார்.
ஒரு நாள் அலுவலகம் விட்டு வரும்போது இரண்டு உண்டியல்களை வாங்கிவந்தார். சூரியனிடம் ஓர் உண்டியல், சந்திரனிடம் ஓர் உண்டியலைக் கொடுத்தார். உடனே மகிழ்ச்சியில் இருவரும் உண்டியல்களைத் தரையில் போட்டு உடைக்கப் போனார்கள். யார் முதலில் உடைப்பது என்று போட்டி வேறு. தலைக்கு மேல் தூக்கியபோது அப்பாவின் குரல் தடுத்தது.
”யாருக்கு சைக்கிள் வேண்டாமோ அவர்கள் உடைக்கலாம்.”
அவ்வளவுதான். சைக்கிள் என்ற மந்திரச் சொல் அவர்களை அப்படியே நிறுத்தியது. சைக்கிள் அவர்களுடைய பெரிய கனவு. உடனே, ”நான்தான் முதல்ல பணம் சேர்த்து சைக்கிள் வாங்குவேன்” என்று இருவரும் ஒன்றாகக் கத்தினார்கள். அப்பா அமைதிப்படுத்தினார்.
”இல்லை. நல்லா கவனிங்க. சூரியனிடம் இருக்கிறது சந்திரனின் உண்டியல். சந்திரனிடம் இருப்பது சூரியனின் உண்டியல்.”
அப்பா சொன்னதைக் கேட்டதும்தான் இரண்டு பேரும் உண்டியலைப் பார்த்தார்கள். சூரியனிடம் சந்திரனின் உண்டியல் இருந்தது. சந்திரனிடம் சூரியனின் உண்டியல் இருந்தது. அப்பா ஏன் இப்படி மாற்றிக் கொடுத்தார்?
”உங்க ரெண்டு பேரில் யார் குறும்பு செய்தாலும் இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போடணும். யார் உண்டியலில் நிறையப் பணம் சேருதோ அவங்களுக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்துருவேன்.”
அப்பா சொன்னதைக் கேட்டு இரண்டு பேரும் விழித்தார்கள்.
”சூரியன் நிறைய குறும்பு செய்தால் சந்திரன் உண்டியலில் நிறைய பணம் சேரும். அவன் சைக்கிள் வாங்கிருவான். சந்திரன் நிறைய குறும்பு செய்தால் சூரியன் உண்டியலில் நிறைய பணம் சேரும். அவன் முதல்ல சைக்கிள் வாங்கிருவான். என்ன புரியுதா?” என்றார் அப்பா.
இருவரும் அமைதியாகத் தலையாட்டினார்கள்.
”நீ எப்படி சைக்கிள் வாங்கறேன்னு பார்க்கறேன்” என்று சூரியனும், ”உன்னை சைக்கிள் வாங்க விட்டால்தானே?” என்று சந்திரனும் சொல்லிக்கொண்டார்கள்.
அன்றிலிருந்து வீட்டில் குறும்பும் சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வந்தது. முதலில் இரண்டு உண்டியல்களிலும் வேகமாகச் சேர்ந்த பணம், பிறகு மெதுகாகக் குறைந்து, ஒருகட்டத்தில் காசு போடுவதே நின்று போனது.
இப்போது சூரியனும் சந்திரனும் நல்ல நண்பர்கள். அப்பா ஒரு நாள் அலுவலகம் விட்டு வரும்போது சூரியன் அழுதுகொண்டிருந்தான்.
”அப்பா, நான் நடந்து வரும்போது டம்ளர் தண்ணியைத் தெரியாமல் தட்டிவிட்டுட்டேன்.. அதுக்கு உண்டியல்ல காசு போடுன்னு சொல்றான்” என்றான் சூரியன்.
அப்பா இரண்டு பேரையும் தூக்கிக்கொண்டார்.
”செல்லங்களா, குழந்தைகள்னா குறும்பு செய்யணும். ஆனால், அது மத்தவங்களைக் கஷ்டப்படுத்தாமல் இருக்கணும். என்ன சரியா? வெளியே போய்ப் பாருங்க” என்றார் அப்பா.
இருவரும் வேகமாக இறங்கி வெளியே ஓடினார்கள். வாசலில் இரண்டு புத்தம் புதிய சைக்கிள்கள் சூரியனையும் சந்திரனையும் பார்த்துச் சிரித்தன.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: கலைப்பகுதி:
ராஜபுத்திரர்களின் ஓவியங்களின் பாணி எவ்வாறு அழைக்கப்பட்டது?
விடை: ராஜஸ்தானி
***
சிந்தனைக்கீற்று:
after a storm, there is a calm.
புயலுக்குப் பின்னே அமைதி.
***
செய்திகள்:
நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல்: அமைச்சர் தகவல்!
***
எண்ணெய் நிறுவனங்களுடன் மோடி ஆலோசனை!
***
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை விட்டுள்ளார்.
***
சமூக வலைதளங்களை கலக்கி வரும் பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தியின் கண்ணான கண்ணே பாடலை பார்த்த அதன் இசையமைப்பாளர் இமான், அவருக்கு பாட வாய்ப்பளிப்பதாக கூறியுள்ளார்.
----------
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 54) 20.செப்டம்பர்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய இசை வெள்ளியில் மாம்பழம் பாடல். வரிவரியாய் படித்து மகிழுங்கள்.
***
நாளொரு குறட்பா: அதிகாரம் வெகுளாமை
தன்னைத்தான் காக்கின் சிநம்காக்க காவாக்கால்
தன்னையே கொள்ளும் சினம்.
விளக்கம்: ஒருவர் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அந்தக் கோபமானது, அவரையே கொன்றழித்துவிடும்.
***
இசைவெள்ளி: மாம்பழம் பாடல்:
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்;
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்:
அழகான மாம்பழம்,
அல்வா போல் மாம்பழம்:
தங்க நிற மாம்பழம்
உங்களுக்கு வேணுமா?
இங்கே ஓடிவாருங்கள்,
பங்கு போட்டு தின்னலாம்.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: சுற்றுலாப் பகுதி:
மவுண்ட் அபு குன்றுகள் எந்த மாநிலத்தில் உள்ளது?
விடை: ராஜஸ்தான்
***
சிந்தனைக்கீற்று:
Old is gold.
பழைமை விலை மதிப்பற்றது.
***
செய்திகள்:
பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பாடங்கள் குறைப்பு.
***
ஈரான் மீது போர் தொடுக்க வாய்ப்பிருக்கிறது: அமெரிக்க அதிபர் டிரம்ப் பேட்டி.
***
மாணவன் படிப்பை நிறுத்தினால் அரசுதான் காரணம்: கமல்ஹாசன் பேச்சு.
***
ஆய்வுக் கூட்டங்கள்: தமிழக ஆளுநர் பாணியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை ...
----------
  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 53) 19.செப்டம்பர்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
இன்று உங்களுக்குப் பிடித்த மாயாபஜார் வியாழன். டிங்குவிடம் உரையாடி மகிழுங்கள்.
***
நாளொரு குறட்பா: அதிகாரம் உழவு
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
விளக்கம்: சுழல்கின்ற உலகமே, ஏரின் பின்னால் நிற்பதால், துன்பப்பட்டாலும், உழவுத்தொழிலே உலகில் முதன்மையான தொழிலாகும்.
***
மாயாபஜார் வியாழன்: டிங்குவிடம் கேளுங்கள்:
காந்தியும் சாதாரண மனிதர்களைப்போல் தவறுகளைச் செய்திருக்கிறார். ஆனாலும் அவரை ஏன் மகாத்மா என்று அழைக்கிறோம், டிங்கு?
சங்கீதா, 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருப்பூர்.
சங்கீதா, 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, திருப்பூர்.
சுவாரசியமான கேள்வி. மகாத்மாவாக காந்தி பிறக்கவில்லை. ஒரு சாதாரண மனிதராகத்தான் பிறந்தார். வளர்ந்தார். அதனால் தவறுகளைச் செய்தார். பிற்காலத்தில் தாம் செய்த தவறுகளை நினைத்து வருந்தினார். இனி தவறு செய்யக் கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டார். அதற்கேற்ப வாழ்ந்தும் காட்டினார். எளிய வாழ்க்கை, அகிம்சை போன்றவற்றைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தார். பிற்காலத்தில் காந்தியை மகாத்மா என்று மக்கள் ஏற்றுக்கொண்ட பிறகும் தாம் சின்ன வயதில் செய்த தவறுகளை மறைக்காமல், தம் சுயசரிதையில் எழுதினார். இதைச் செய்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும்! குற்றம் குறைகளோடு இருந்த சாதாரணமான காந்தி, பிற்காலத்தில் இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமேற்று வழிநடத்தினார். உலக நாடுகளுக்கு அகிம்சையின் அடையாளமாகத் திகழ்ந்தார். நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் போன்ற உலகத் தலைவர்கள் காந்தியின் வழியைப் பின்பற்றினார்கள். அவர் மறைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் அகிம்சைப் போராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையை உலகத்தில் விதைத்துக்கொண்டிருக்கிறார். காந்தியை மகாத்மாஎன்று அழைப்பது பொருத்தம்தானே, சங்கீதா?
என் வரலாற்று ஆசிரியர் அங்கோர் வாட்பற்றி விரிவாக எழுதி வரச் சொல்லியிருக்கிறார். எனக்கு உதவுவாயா, டிங்கு?
என்ன இது, ஆசிரியர் கொடுக்கும் வீட்டுப் பாடங்களை எல்லாம் என்னைச் செய்ய வைத்துவிடுவீர்கள் போலிருக்கிறதே! நீங்கள் கேள்வி கேட்டு குறைந்தது ஒரு வாரம் கழித்துதான் மாயாபஜாரில் பதில் வெளிவரும். அதுவரை எப்படி உங்களால் காத்திருக்க முடியும்? ஒருவேளை இந்தக் கேள்வி இந்த வாரம் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? அதனால் பள்ளி தொடர்பான விஷயங்களில் என் உதவியை எதிர்பார்த்துக்கொண்டிருக்காதீர்கள், ஆதித்யா.
கம்போடியா நாட்டில் இருக்கும் அங்கோர் வாட்’, உலகின் மிகப் பெரிய வழிபாட்டுத் தலமாக இருக்கிறது (163 ஹெக்டேர் பரப்பளவு). 12-ம் நூற்றாண்டில் கெமர் வம்ச மன்னர் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது. இது விஷ்ணுவுக்கான கோயிலாக முதலில் இருந்தது. 14-ம் நூற்றாண்டில் புத்தர் கோயிலாக மாற்றம் அடைந்தது. கெமர் கட்டிடக்கலையின் சிறப்பை எடுத்துக் காட்டும் விதத்தில் கம்பீரமாக இப்போதும் நின்றுகொண்டிருக்கிறது. அங்கோர் வாட்என்றால் கோயில்களின் நகரம்என்று பொருள். தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தையும் கும்பகோணத்தையும் கோயில்களின் நகரம்என்று அழைக்கிறார்கள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்!
கண்ணீர் ஏன் சுரக்கிறது, டிங்கு?
கண்கள் இப்படியும் அப்படியும் இயங்கிக்கொண்டே இருக்கின்றன. கண்கள் இயங்குவதற்கு ஈரப்பசை அவசியம். கண்ணீர் சுரந்துகொண்டே இருப்பதால்தான் கண்கள் உலர்ந்துவிடாமல் இருக்கின்றன. கண்ணீர் ஒரு மசகுபோல் வேலை செய்வதால்தான் நாம் கண்களை மூடித் திறப்பது எளிதாக இருக்கிறது. காற்றில் வரும் தூசி, கிருமி போன்றவை கண்களில் படும்போது, அந்தப் பாதிப்பிலிருந்து கண்களைக் காப்பாற்றுவதற்காகக் கண்ணீர் சுரந்து, அவற்றை வெளியேற்றுகிறது. கருவிழிக்குத் தேவையான ஆக்சிஜனையும் கண்ணீர்தான் வழங்குகிறது. கண்களின் மேல்புறத்தில் கண்ணீர்ச் சுரப்பி இருக்கிறது. இது எப்பொழுதும் சிறிதளவு கண்ணீரைச் சுரந்துகொண்டே இருக்கிறது. ஒரு நாள் முழுவதும் சுரந்தாலும் 1 மில்லி அளவு கண்ணீர்தான் சுரக்கிறது. கண்களில் உறுத்தல், வலி, துக்கம் போன்ற உணர்ச்சிகள் ஏற்படும்போது அதிக அளவில் கண்ணீர் சுரக்கிறது. கண்ணீர்ச் சுரப்பிகளில் மட்டுமல்லாமல் விழிவெண்படலத்திலும் இமைகளிலும் உள்ள துணைச் சுரப்பிகளும் சிறிதளவு கண்ணீரைச் சுரக்கின்றன, அணீஸ் சங்கர்.
காலாண்டு விடுமுறையில் 10-ம் வகுப்புக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்தினால், மாணவர்களுக்கு மன உளைச்சல் வராதா, டிங்கு?
உங்கள் ஆதங்கம் புரிகிறது, ரக்‌ஷன். கடினமாக உழைத்து தேர்வு எழுதிய பிறகு, சில நாட்கள் விடுமுறை என்பது மிகவும் அவசியமானது. அடுத்து வரப் போகும் அரையாண்டுத் தேர்வுக்குப் படிப்பதற்கு, இந்த விடுமுறை நாட்கள் உற்சாகத்தை அளிக்கும். இதைப் பள்ளிகள் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது பெரும்பாலான பள்ளிகள் பொதுத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்கிறோம் என்று தினமும் சிறப்பு வகுப்புகள், விடுமுறையிலும் சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொண்டிருக்கின்றன. மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் பள்ளிகள் இதைச் செய்கின்றன என்றாலும் சற்று ஓய்வு கொடுப்பது நல்லது. இந்த விடுமுறை மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் அவசியம். கிடைக்கும் நேரத்தில் நன்றாக ஓய்வு எடுங்கள். விருப்பமான செயல்களில் ஈடுபடுங்கள். மனதை உற்சாகப்படுத்திக்கொள்ளுங்கள். நண்பர்களுடன் உரையாடுங்கள். விளையாடுங்கள். பாடப்புத்தகம் அல்லாத புத்தகங்களைப் படியுங்கள். ஒரு மாற்றம் கிடைக்கும். மகிழ்ச்சி உண்டாகும். மன உளைச்சல் வரைக்கும் செல்ல மாட்டீர்கள், ரக்‌ஷன் மகாஜன்.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: வரலாற்றுப் பகுதி:
வாணிபம் செய்ய முதன்முதலாக இந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர் யார்?
விடை: வாஸ்கோடாகாமா
***
சிந்தனைக்கீற்று:
Man proposes god disposes.
அரசன் அன்றே கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
***
செய்திகள்:
வடமாநிலங்களில் கூட இந்தியை திணிக்க முடியாது: ரஜினி பேட்டி.
***
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நிச்சயம் மீட்போம் எனக் கூறிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்குப் பாக்கிஸ்தான் கண்டனம்.
***
காஷ்மீர் தலைவர்களுக்கு குறைந்தபட்சம் ஒன்றரை வருடம் சிறை நீடிக்கும் என பிரதமர் அலுவலகம் தகவல்.
***
எல்லை மீறிய சீரியல் வன்முறை: சன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம்! ...
----------
 

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 52) 18.செப்டம்பர்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய தகவல் புதனில், மனித எலும்புகள் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.
***
நாளொரு குறட்பா: அதிகாரம் நட்பு
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் கலைவதாம் நட்பு.
விளக்கம்: உடுத்தியிருக்கும் உடை அவிழ்ந்து கீழே விழுகையில், கை தானே ஓடிச்சென்று உதவுவதுபோல, நண்பனுக்குத் துன்பம் நேர்கையில், அவன் அழைக்காமலேயே ஓடிச்சென்று உதவுவது சிறந்த நட்பாகும்.
***
தகவல் புதன்: மனித எலும்புகள்:
ஒரு சாதாரண வளர்ந்த மனிதனுடைய எலும்புக்கூடு பின்வரும் 206 (மார்பெலும்பு மூன்று பகுதிகளாகக் கருதப்பட்டால் 208) எண்ணிக்கையான எலும்புகளைக் கொண்டிருக்கும். இந்த எண்ணிக்கை உடற்கூட்டியல் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். எடுத்துக்காட்டாக, மிகக் குறைந்த எண்ணிக்கையான மனிதர்களில், ஒரு மேலதிக விலா எலும்பு (கழுத்துவில்) அல்லது ஒரு மேலதிகமான கீழ் முதுகெலும்பு காணப்படுவதுண்டு; இணைந்த சில எலும்புகளைத் தனி எலும்பாகக் கருதாவிடின், ஐந்து இணைந்த திருவெலும்பு; மூன்று (3 - 5) குயிலலகு எலும்புகள் சேர்ந்து 26 எண்ணிக்கையிலான முதுகெலும்புகள் 33 ஆகக் கருதப்படலாம்.[1] மனித மண்டையோட்டில் 22 எலும்புகள் (காதுச் சிற்றென்புகளைத் தவிர) உள்ளன; இவை எட்டு மண்டையறை (cranium) எலும்புகளாகவும் 14 முக எலும்புகளாகவும் (facial bones) பிரிக்கப்பட்டுள்ளன. (
***
பொது அறிவுப் பொக்கிஷம்: அறிவியல் பகுதி:
சந்திராயன் 1 திட்டத்தில் பங்குபெற்ற தமிழ் பேசும் விஞ்ஞானி யார்?
விடை: மயில்சாமி அண்ணாதுரை
***
சிந்தனைக்கீற்று:
Time and tide wait for none.
ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்காது.
***
செய்திகள்:
தந்தைப் பெரியாரின் 141ஆவது பிறந்தநாள்  விழா மாநிலமெங்கும் அனுசரிப்பு.
***
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
***
சவுதி அரேபியா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.
***
இந்தியாவுக்குப் பல மொழிகள் இருப்பது பலவீனமல்ல, ராகுல் காந்தி பேட்டி.
----------
 

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in