தூரிகை (மாணவர் இதழ் 65) 5.11.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய இலக்கிய செவ்வாயைப் படித்து, பொது அறிவுப் பொக்கிஷத்திற்கான விடை தேடுங்கள்.
நாளொரு குறட்பா: அதிகாரம் ஒழுக்கம் உடைமை
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
விளக்கம்: எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்.
இலக்கிய செவ்வாய்: சங்க இலக்கியம்:
கடந்த வாரம் சங்க இலக்கியங்கள் எவை எனப் பார்த்தோம். இந்த வாரம் பத்துப்பாட்டு எவை எனப் பார்ப்போம். பத்துப்பாட்டுகளாவன
1 திருமுருகாற்றுப்படை
2 பொருநராற்றுப்படை
3 சிறுபாணாற்றுப்படை
4 பெரும்பாணாற்றுப்படை
5 முல்லைப்பாட்டு
6 குறிஞ்சிப்பாட்டு
7 மதுரைக்காஞ்சி
8 நெடுநல்வாடை
9 பட்டினப்பாலை
10 மலைபடுகடாம் ஆகியவை ஆகும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: இலக்கியப்பகுதி:
பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் எத்தனை?
விடை; 4
சிந்தனைக்கீற்று:
Angry man has no knowledge.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
செய்திகள்:
தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலை ஒன்றின் மீது மர்ம நபர்கள் சாணியை வீசி அவமதித்துள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், விசாரணை அறிக்கையை வெளியிடமுடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சென்னையில் தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் மூன்று வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

எந்த மாநிலத்திலும் இந்தியைத் திணிக்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.