2020 ஆம் ஆண்டின் வரவேற்ப்பு

2020 புத்தாண்டு துவக்கத்தில் புதுக்கோட்டை பார்வைத்திறன் குறையுடையோர்க்கான அரசு  நடுநிலை பள்ளி.


வெளிர் நீல கட்டத்திற்குள் நீல வண்ண பின்னணி பலகையில் வெள்ளை எழுத்துக்களில் பள்ளி பெயர் பலகை

முதலாவதாக உங்கள் அனைவருக்கும் எங்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் சார்பாக 2020 ஆம் ஆண்டிற்க்கான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அடுத்ததாக அரசு நிறுவனங்களை பொறுத்தவரை வெளிர் நீல கட்டத்திற்குள் நீல வண்ண பின்னணி பலகையில் வெள்ளை எழுத்துக்களில் பெயர் பலகை பொறுத்த வேண்டும் என்பது வழக்கம், வழக்கம் மட்டுமல்லாது அடிப்படை விதிகளில் ஒன்றுகூட. 

தற்சமையம் முதன் முறையாக தகரத்தாலான மேற்கண்ட வண்ணங்ளில் பெயர் பலகை பொறுத்தப்பட்டுள்ளது.

கழிவறை தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிந்தனை வரிகள் பள்ளி வளாக வெளி சுவற்றில் எழுதப்பட்டுள்ளது.

சாலையில் ஓடும் மழை நீர் பள்ளிக்குள் வராமல் தடுக்க நுழைவாயிலை உயர்த்தி சரி செய்யப்பட்டுள்ளோம். இது பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்கு எவ்விதத்திலும் இடையூறு ஏற்படாத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த செயல்கள்  2020 புத்தாண்டில் பள்ளிக்கு வரும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மற்ற பணியாளர்களையும் உட்சாகம் அடைய வைக்கும்.

இந்த புத்தாண்டு தொடக்கம் முதல் பள்ளியில் மேலும் அத்தியாவசிய அடிப்படை கட்டமைப்புகள், கல்வி சார்ந்த கட்டமைப்புகள், மாணவர்களின் அறிவு சார்ந்த கட்டமைப்புகளும் செயல்படுத்த வேண்டும் என்று இந்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது போன்ற மாணவர்கள் முன்னேற்றம் மற்றும் பள்ளி முன்னேற்றத்திற்க்காக  தன்னார்வளர்களும் எங்களோடு கரம் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பொது மக்களும் தன்னார்வளர்களும் எம் பள்ளி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கண் பார்வையில் குறைபாடு உள்ள மாணவர்களை கண்டறிந்து இப்பள்ளியில் சேர்க்கவும், தரமான மாணவர்களை உருவாக்கிடவும் துணைபுரிய வேண்டுமாய் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இங்கனம்
ப. வடிவேலன் 
பள்ளி தலைமை ஆசிரியர்.
கைபேசி என் 9840272383, 9080855199.
தொலைபேசி 04322 226452

ஒருவனுக்கு கல்வி கற்க உதவுபவன்
பல சிறைச்சாலையை முடுக்கிறான்.


எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.