தூரிகை (மாணவர் இதழ் 42) 30.ஆகஸ்ட்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய இசைவெள்ளியில் பலூன் பற்றிய பாடல். கேட்டுப் பாடிப் பாருங்கள்.
***
நாளொரு குறட்பா: அதிகாரம் நடுவுநிலைமை குறள் 9
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
விளக்கம்: நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவருக்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.
***
இசைவெள்ளி: - பத்துப் பைசா பலூன்

பத்துப் பைசா விலையிலே

பலூன் ஒன்று வாங்கினேன்.

பலூன் ஒன்று வாங்கினேன்.

பையப் பைய ஊதினேன்.

பையப் பைய ஊதவே

பந்து போல ஆனது.

பந்து போல ஆனபின்

பலமாய் நானும் ஊதினேன்.

பலமாய் ஊத ஊதவே

பானை போல ஆனது.

பானை போல ஆனதைக்

காண ஓடி வாருங்கள் !

விரைவில் வந்தால்

பார்க்கலாம்.

அல்லது,

வெடிக்கும் சத்தம்

கேட்கலாம் !
---அழ. வள்ளியப்பா
***
பொது அறிவுப் பொக்கிஷம்: - சுற்றுலா பகுதி:
உலகிலேயே மிகப்பெரிய கடற்கரை எது?
விடை: அமெரிக்காவிலுள்ள மியாமி கடற்கரை
***
சிந்தனைக்கீற்று:
No smoke without fire.
நெருப்பில்லாமல் புகையாது.
***
செய்திகள்:
முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய நளினியின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
***
75 புதிய மருத்துவக் கல்லூரிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்! ...
***
பழனி பஞ்சாமிர்த கடைகளில் ஐடி ரெய்டு!
***
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!
----------
  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 41) 29.ஆகஸ்ட்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
இந்திய விடுதலைக்கு முன்னோடிப் போராகக் கருதப்படும் வேலூர் சிப்பாய் புரட்சி குறித்து இன்றைய சரித்திர வியாழனில் தெரிந்துகொள்ளுங்கள்.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் நடவுநிலைமை குறள் 8
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
விளக்கம்: ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தராசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்.
***
சரித்திர வியாழன் – வேலூர் சிப்பாய் புரட்சி:
வேலூர் சிப்பாய் புரட்சி அல்லது வேலூர் சிப்பாய் எழுச்சி ஜூலை 10, 1806 இல் தமிழ்நாட்டில் வேலூர்க் கோட்டையில் நிகழ்ந்த சிப்பாய் எழுச்சியைக் குறிக்கும் நிகழ்வாகும்.
1805இல், வேலூர் கோட்டையில் இருந்த மெட்ராஸ் ரெஜிமெண்டை சார்ந்த தென்னிந்தியத் துருப்புகள் கலகத்தில் வெடித்தெழுந்தனர். அந்த வருடம், பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, இந்தியப் படைகள் விபூதி, நாமம் போன்ற சமய அடையாளங்களைப் போடக்கூடாது, தலையில் 'கிருதா'வை சீவ வேண்டும், காதில் தோடு போடக்கூடாது, மேலும் ஐரோப்பிய ராணுவ உடைகளை அணிய வேண்டும் என ஆணையிட்டார். சிப்பாய்கள் ஐரோப்பிய முறைப்படி குழாய் வடிவ தொப்பியைப் போட்டு அதில் தோல் பட்டையைப் போடவேண்டும் எனவும் உத்தரவு வந்தது. அதனால் அங்கிருந்த 1500 இந்து, முஸ்லிம் துருப்புக்கள் கோபமடைந்து, வெடித்தெழுந்தனர். அந்தக் கலகக்காரர்களின் தலைவர்களுக்கு 600 பிரம்படி கிடைத்தது. ஆனால் அது துருப்புக்களை இன்னும் கோபமூட்டியது. இதற்கிடையில், வேலூரில் சிறை வைக்கப் பட்டிருந்த திப்பு சுல்தானின் மகன்கள் துருப்புக்களுக்கு ஆரவாரம் கொடுத்துத் தூண்டி விட்டதாகச் சொல்லப் படுகிறது.
10-7-1806 அதிகாலையில் பல ஆங்கிலேய அதிகாரிகள் அவர்கள் படுக்கையில் இருக்கும்போதே கொல்லப்பட்டனர். அங்கிருந்த 350 பிரிட்டிஷ் ஆட்களில், 100 பேர் கொல்லப் பட்டனர். ஆனால் இந்தப் புரட்சி அரசியல், ராணுவ குறிக்கோள்களுடன் எழவில்லை. அதனால், இந்தியத் துருப்புக்களை, அதிகாரிகளைக் கொன்று களித்து வந்தனர். அவர்கள் வேலூர் கோட்டையின் கதவைக் கூட மூடவில்லை. இரண்டு நாட்களில், ஆர்காட்டிலிருந்த 19ம் சிறிய குதிரைப் படை (19த் லைட் ட்ரகூன்ஸ்) வேலூர் நோக்கிப் பாய்ந்து, வேலூர் கோட்டையைக் கைப்பற்றியது. அந்தச் சண்டையில் 350 துருப்புகள் உயிர் துறந்தன; அந்த அளவு காயமடைந்தனர். மற்ற இந்தியத் துருப்புக்களும் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்ட துருப்புகள் பீரங்கியின் வாயில் கயிற்றால் கட்டப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச் சிப்பாய்ப் புரட்சி, 1857 பெரும் புரட்சிக்கு முன்னோடியாகும். இந்நிகழ்வின் ஞாபகமாக, இந்திய அரசு ஜூலை 2006ல், அஞ்சல் தலை வெளியிட்டது.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: வரலாற்றுப் பகுதி:
வேலூர் சிப்பாய் புரட்சி எந்த ஆண்டு நடைபெற்றது?
***
சிந்தனைக்கீற்று:
Wisdom is power.
அறிவே ஆயுதம்.
***
செய்திகள்:
ஜனநாயகத்துக்கு குரல் கொடுத்தால் தேச விரோதியா?: மு.க.ஸ்டாலின் கேள்வி.
***
தேச நலனுக்காகவே ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து:  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயிடு பேட்டி.
***
ரிசர்வ் வங்கியில் இருந்து நிதியைத் திருடுவதால் பலனில்லை: ராகுல் காந்தி ஆவேசம்.
***
வெளிநாடு சுற்றுப்பயணம் புறப்பட்டார் முதல்வர்.
----------
 

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 40) 28.ஆகஸ்ட்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
தற்போது எரிந்துகொண்டிருக்கும் அமேசான் மலைக்காடுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
***
நாளொரு குறட்பா: அதிகாரம் நடுவுநிலைமை குறள் எண் 7
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
விளக்கம்: நடுவுநிலைமை தவறாமல் அறத்தோடு வாழும் ஒருவருக்கு அதனால் செல்வம் குவியாமல் வறுமை ஏற்படுமானால், அதை கேடு என்று மக்கள் நினைக்காமல், உயர்வாகவே எண்ணுவார்கள்.
***
தகவல் புதன்: அமேசான் காடுகள்:
அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும். இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: அறிவியல் பகுதி:
கணிப்பொறியின் தந்தை யார்?
விடை: சார்லஸ் பாப்பேஜ்
***
சிந்தனைக்கீற்று:
Small drops make mighty ocean.
சிறுதுளி பெருவெள்ளம்.
***
செய்திகள்:
தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் பாதிப்பு.
***
மத்திய அரசுக்கு ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி நிதியை வழங்கியது RBI.
***
தீபாவளி பண்டிகைக்கான சிறப்புப் பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கியது.
***
கர்நாடகாவிற்கு மூன்று துணைமுதல்வர்கள் எடையூரப்பா அறிவிப்பு.
----------
 

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 39) 27.ஆகஸ்ட்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய சிந்தனைச் செவ்வாயில் ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் சிந்தனைகளைப் படித்துப் பயன்பெறுங்கள்.
***
நாளொரு குறட்பா: - அதிகாரம் நடுவுநிலைமை குறள் எண்
கெடுவல்யான் என்பது அறிக தன்நெஞ்சம்
நடுவொரிஈ அல்ல செயின்.
விளக்கம்: நடுவுநிலைமை தவறி தீமை செய்தால், நிச்சயம் தான் கெட்டுப் போவோம் என்பதை அறிய வேண்டும்.
***
சிந்தனைச்செவ்வாய்: - லியோ டால்ஸ்டாய்
ஒவ்வொருவரும் இந்த உலகை மாற்ற நினைக்கிறார்களே தவிர, தன்னை மாற்றிக்கொள்ள எவரும் நினைப்பதில்லை.
உண்மை என்பது தங்கத்தைப் போன்றது. அதன் உயர்வால் அல்ல. அதைப் நன்கு புடம்போட்டால்தான் அதைத் தங்கம் என்றே கண்டறிய முடியும்.
எளிமையும் உண்மையும் இல்லாத இடத்தில் நன்மை இருக்கவே முடியாது.
***
பொது அறிவுப் பொக்கிஷம்: இலக்கியப் பகுதி:
பெரியபுராணம் நூலை இயற்றியவர் யார்?
விடை: சேக்கிழார்
***
சிந்தனைக்கீற்று:
Truth is stranger than fiction.
உண்மை கற்பனையைவிட விசித்திரமானது.
***
செய்திகள்:
நேற்றுமுதல் தொடங்கியது கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு.
***
பா.சிதம்பரத்தின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
***
உலக பேட்மிட்டன் போட்டியில் தங்கம் வென்றார் பிவி சிந்து.
***
காவலர் தேர்வில் ஆள் மாறாட்டம், மூன்றுபேர் கைது.
----------
  பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in