தூரிகை (மாணவர் இதழ் 63) 25.அக்டோபர்.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
இந்த வாரம் முதல் இனி ஒவ்வொரு வெள்ளியும் கணினி பற்றி அறிந்துகொள்ள நம் இதழில் ஒரு புதிய பகுதி அறிமுகமாகிறது. படியுங்கள் பயன்பெறுங்கள்.
நாளொரு குறட்பா: - அடக்கம் உடைமை:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் தந்த துன்பம் ஆறவே ஆறாது.
கணினி வெள்ளி: கணினி அறிவோம்:
குழந்தைகளே! இது கணினி யுகம். விற்பது, வாங்குவது கற்பது, விளையாடுவது என எல்லாமே கணினிக்குள் வந்துவிட்டது. எனவே கணினி அறிவு நமக்கு மிக மிக அவசியமாகும். ஆகவே, இந்த வாரம் தொடங்கி இனி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கணினி பற்றிப் படிப்போம்.
முதலில் கணினி என்றால் என்ன என்பதற்கு நமக்கு விடை தெரிய வேண்டும். கணினி என்பது ஒரு மின்னணு இயந்திரம். அதை பயன்படுத்தி நாம் நமது அன்றாட வேலைகளை எளிமையாகச் செய்து முடிக்கலாம். அத்தோடு, உலகத்தோடு மிக எளிதாக உரையாடவும் கணினி நமக்கு உதவுகிறது. இனி கணினியின் அமைப்பு பற்றி தெரிந்துகொள்ளலாம். அதற்கு அடுத்த வாரம் வரை காத்திருங்களேன்.
பொது அறிவுப் பொக்கிஷம்: சுற்றுலா பகுதி:
தேயிலை உற்பத்திய்ல் நாட்டிலேயே முதலிடம் வகிக்கும் மாநிலம் எது?
விடை: அஸ்ஸாம்.
சிந்தனைக்கீற்று:
Learning is must, even begging.
பிச்சை புகினும் கற்கை நன்றே.
செய்திகள்:
பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கு மத்திய அரசு அனுமதி!
பேனர் வைக்கக் கூடாது: அதிமுக பிரமாண பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல்.
தீபாவளியன்று, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களில் இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசம் முதல் இடத்திலும் தமிழகம் ஆறாவது இடத்திலும் இருப்பதாகத் தகவல்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 62) 24.அக்டோபர்.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
இந்த வாரம் முதல் வகுப்பறை வியாழன் என்கிற புதிய பகுதி ஆரம்பமாகிறது. இந்தப் பகுதியில் ஆங்கிலம் கற்றுப் பயன்பெறுங்கள்.
நாளொரு குறட்பா: அடக்கம் உடைமை:
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்.
வகுப்பறை வியாழன்: - ஆங்கிலம் கற்போம்:
குழந்தைகளே! இனி ஒவ்வொரு வியாழனும், நாம் கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் பழகலாம்.
ஆங்கிலம் இன்னொரு நாட்டு மொழிதான். ஆனால் கற்றுக்கொள்வதற்கு மிகவும் எளிமையானது. கொஞ்சம் ஆர்வமும், கொஞ்சம் உழைப்பும் இருந்தால், நிச்சயம் ஆங்கிலம் உங்கள் கைவசம். முதலில் சிறு சிறு வாக்கியங்களை படிப்போம்.
How are you?
எப்படி இருக்கீங்க?
What do you want?
உங்களுக்கு என்ன வேனும்?
Where are you going?
எங்க போறீங்க?
இந்த வாக்கியங்களில் காணப்படுகிற மூன்று கேள்விகளைக் கண்டுபிடியுங்கள்.
அடுத்த வாரம் தொடர்வோம்.
பொது அறிவுப் பொக்கிஷம்: வரலாறு:
சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத்தலைவர் யார்?
விடை: டாக்டர் ராஜேந்திர பிரசாத்
சிந்தனைக்கீற்று:
No man can serve two masters
ஆற்றிலே ஒருகால் ; சேற்றிலே ஒரு கால் வைக்காதே
செய்திகள்:
உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிவைப்பதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அறிமுகமாக உள்ளது பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு!
நில அபகரிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் மு.க.அழகிரி

பார்வையற்ற இளைஞர் திருமூர்த்தியைப் பிரபல நடிகரின் திரைப்படத்தில் பாடகராக அறிமுகமாக்கி தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றியுள்ளார் இசையமைப்பாளர் இமான்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 61) 23.அக்டோபர்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றைய தகவல் புதனில் சகாரா பாலைவனம் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
நாளொரு குறட்பா: அடக்கம் உடைமை:
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
விளக்கம்: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.
தகவல் புதன்: - சகாரா பாலைவனம்:
மிகப் பெரிய வெப்பப் பாலைவனம் சஹாரா. அண்டார்டிகா, ஆர்க்டிக் குளிர்ப் பாலைவனங்களுக்கு அடுத்து மூன்றாவது பெரிய பாலைவனம் சஹாரா.

11 நாடுகளில் பரந்து விரிந்திருக்கிறது சஹாரா. ஆண்டுக்கு 3 அங்குலத்துக்கும் குறைவான மழையே பெய்கிறது. சில இடங்களில் மழையே பெய்வதில்லை.

சஹாராவில் சுமார் 500 வகைத் தாவரங்களும் 70 வகை விலங்குகளும் வசிக்கின்றன. சஹாராவின் நீர்நிலைகளுக்கு அருகே சுமார் 20 லட்சம் மனிதர்களும் வாழ்கிறார்கள்.
 பொது அறிவுப் பொக்கிஷம்: அறிவியல் பகுதி:
ரத்தத்திலுள்ள சுவாச நிறமி எது?
விடை: ஹீமோகுலோபின்
சிந்தனைக்கீற்று:
the world is a stage.
உலகமே ஒரு நாடகமேடை.
செய்திகள்:
சிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமீன்: தொடர்கிறது  விசாரணை!
ஏழு பேருக்காக ஆளுநரை வற்புறுத்த முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.
தனியார் ரயில் தாமதம்: பயணிகளுக்கு இழப்பீடு!
தமிழகத்தில் அதிகரிக்கும் முதியவர்கள் மீதான தாக்குதல்கள்! ...
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 60) 22.அக்டோபர்.2019


அன்பு மாணவச் செல்வங்களே!
இனிவரும் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் இலக்கியம் அறிவோம் பகுதி. படித்துப் பயன்பெறுங்கள்.
 நாளொரு குறட்பா: - அடக்கம் உடைமை:
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
விளக்கம்: உறுப்புகளை ஓர் ஓட்டுக்குள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல் ஐம்பொறிகளையும் அடக்கியாளும் உறுதி, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் காவல் அரணாக அமையும்.
சிந்தனைச் செவ்வாய்: இலக்கியம் அறிவோம்:
2000 வருடங்களுக்கு முன்பாக எழுதப்பட்ட கவிதைகளை நாம் சங்க இலக்கியங்கள் என்கிறோம். அதாவது, அந்தக் கவிதைகள் எழுதப்பட்ட காலம் சங்க காலம் என்றழைக்கப்படுகிறது.
சங்க இலக்கியங்கள் எனப்படுபவை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என வகைப்படுத்தப்பட்டுல்ளன.
இந்த இலக்கியங்கள், சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு தமிழர் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதைத் தெளிவாக விளக்குகிறது. சுமார் 473 புலவர்கள் பாடிய 2183 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பாகும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - இலக்கியப்பகுதி:
சங்க இலக்கியம் என்பது மொத்தம் எத்தனை பாடல்களைக் கொண்டது?
சிந்தனைக்கீற்று:
Don’t make slave, don’t be slave.
எவரையும் தாழ்த்தாதே, எவருக்கும் தாழாதே.
செய்திகள்:
நாங்குநேரி: தேர்தல் புறக்கணிப்பில் 113 கிராமங்கள்!
அரசியலமைப்பின்படி செல்லுங்கள்: அயோத்தி வழக்கில் முஸ்லீம்கள்! .. வேண்டுகோல்.
மகராஷ்டிர தேர்தலில் வேட்பாளர் மீது தாக்குதல், கார் தீ வைப்பு!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேரின் குடும்பத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் நேற்று புதிய வீடுகளை வழங்கினார்.
 

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 59) 21.அக்டோபர்.2019

அன்பு மாணவச் செல்வங்களே! இன்றைய கதைத்திங்களில் மிகச்சிறப்பான கதை ஒன்று இடம்பெற்றுள்ளது. கவனமாகப் படித்துப் பயன்பெறுங்கள்.
நாளொரு குறட்பா:
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
விளக்கம்: பணிவு என்னும் பண்பு, எல்லார்க்கும் நலம் பயக்கும். ஏற்கனவே செல்வர்களாக இருப்பவர்களுக்கு அந்தப் பண்பு, மேலும் ஒரு செல்வமாகும்.
கதைத்திங்கள்: அழகுக்கு மயங்கலாமா?
பூனைக்கு மிகவும் ஏமாற்றமாகிவிட்டது. எப்படியாவது இந்தக் கவுதாரியைப் பிடித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்தது. புதருக்கு அருகே சென்றது.
“என்னைக் கண்டு ஏன் ஓடிவிட்டாய்? உன்னிடம் நட்பாக இருப்பதற்கே ஆவலோடு வந்தேன். இப்படி என்னை ஏமாற்றிவிட்டாயே, கவுதாரி?” என்று மிகவும் பாவமாகக் கேட்டது பூனை.
“எனக்கு ஏராளமானவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். உன்னை நண்பனாக ஏற்க வேண்டிய அவசியம் இல்லை. உனக்கும் எனக்கும் எந்தவிதத்திலும் ஒத்துப் போகாது. உன் அன்புக்கு நன்றி” என்று புதருக்குள் இருந்து குரல் கொடுத்தது கவுதாரி.
“என்னை நம்பு. பறவைகளிலேயே மிகவும் அழகானவர்கள் கவுதாரிகள்தாம். ஒரு கவுதாரியிடம் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் லட்சியம். என் மேல் நம்பிக்கை இல்லை என்றால் மற்ற பறவைகளிடம் சென்று, நான் சொன்னது உண்மையா, இல்லையா என்று கேட்டுப் பார். உண்மை என்றால் என்னை நண்பனாக ஏற்றுக்கொள். இல்லை என்றால் வேண்டாம்” என்று சொல்லிவிட்டுப் பூனை சென்றுவிட்டது.
கவுதாரி யோசித்தது. ஒருவேளை பூனை சொல்வது உண்மையாக இருக்குமோ? மற்றவர்களிடம் கேட்டுப் பார்த்துவிட்டு, முடிவு செய்யலாம் என்று வெளியே வந்தது.
எதிரில் மயில் வந்துகொண்டிருந்தது. “மயிலே, பறவைகளில் நாங்கள்தானே அழகு?” என்று கேட்டது கவுதாரி.
“என்னது நீங்கள் அழகா? இவ்வளவு அழகாக இருக்கும் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்க உனக்கு எவ்வளவு துணிச்சல்? ஓடிப் போய்விடு” என்று கோபத்துடன் கூறிவிட்டுச் சென்றது மயில்.
‘மயில் அழகுதான், அதற்காக இவ்வளவு அகம்பாவம் கூடாது’ என்று நினைத்த கவுதாரி, பழத்தோட்டம் பக்கம் வந்தது. அங்கே ஒரு கிளி அமர்ந்திருந்தது.
“கிளியே, பறவைகளில் நாங்கள்தானே அழகானவர்கள்?” என்று கேட்டது கவுதாரி.
“அழகிலும் பேச்சிலும் எங்கள் இனம்தான் சிறந்தது. இளம் பச்சை உடலும் சிவந்த அலகும் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பது உனக்கே தெரியும். ஆனாலும் இந்தக் கேள்வியைக் கேட்கிறாய். ஓடிப் போய்விடு” என்று எச்சரித்தது கிளி.
“அழகு இருக்கும் அளவுக்கு அன்பு இல்லையே!. பூனைதான் என்னை அழகு என்று உண்மையைச் சொல்கிறது. அப்படி என்றால் பூனை சொல்வதுபோல் அதை நண்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்’ என்ற முடிவோடு சென்றுகொண்டிருந்தது கவுதாரி.
“என்ன கவுதாரி, கண்டுகொள்ளாமல் போகிறாய்?” என்று கேட்டது சிட்டுக்குருவி.
“ஓ… ஏதோ யோசனையில் போயிட்டேன். எப்படி இருக்கே?”
“நான் நல்லாதான் இருக்கேன். உன் பிரச்சினை என்ன?”
கவுதாரி நடந்த விஷயங்களைச் சொன்னது.
“பூனை உன்னை மட்டும் பிடிக்காமல், உங்கள் கூட்டத்தையே பிடிப்பதற்காகத்தான் நட்புக் கோரிக்கை வைத்திருக்கிறது. இதைக்கூடப் புரிந்துகொள்ளாமல் பறவைகளிடம் கேள்வி கேட்டிருக்கிறாய். கவுதாரிகளில் நான் அழகானவளா என்று கேட்டிருந்தால், எல்லாப் பறவைகளும் உன்னைத்தான் அழகு என்று சொல்லியிருக்கும். நீயோ பறவைகளில் யார் அழகு என்று கேட்டால், அவை தங்களைத்தானே சொல்லிக்கொள்ளும்? இது பூனையின் சதி. உன்னைப் பூனையிடமிருந்து நிரந்தரமாகக் காப்பாற்ற ஒரு வழி செய்கிறேன்” என்று கவுதாரியின் காதில் தன் திட்டத்தைக் கூறியது சிட்டுக்குருவி.
மறுநாள் பூனை வந்தது. “எல்லாப் பறவைகளிடமும் அந்தக் கேள்வியைக் கேட்டாயா? நான் சொன்னதுதானே உண்மை? அப்படி என்றால் என்னை நண்பனாக ஏற்றுக்கொள்” என்றது பூனை.
“ஆமாம். நீ சொன்னது முற்றிலும் சரிதான். என் அழகுக்கு முன்னால் எல்லாமே தலைகுனிந்துவிட்டன. ஆனால், ஒரே ஒருவர் மட்டும் என்னை அழகு என்று ஏற்றுக்கொள்ளவில்லை” என்றது கவுதாரி.
“யாரது? என் நண்பனை அழகில்லை என்று சொன்னது, யார்? இப்போதே இரையாக்கிக்கொள்கிறேன்” என்று உடலைச் சிலிர்த்தது பூனை.
“பறவைகள் எல்லாம் என்னை அழகு என்று ஏற்றுக்கொண்டாலும் அதில் எனக்குத் திருப்தி இல்லை. அதனால் செந்நாயிடம் கருத்துக் கேட்டேன். கேள்வி கேட்டவனைக் காட்டு, பிறகு பதில் சொல்கிறேன் என்றது. அதோ மரத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது” என்றது கவுதாரி.
“என்னது, செந்நாயா? உன்னைப் பறவைகளிடம்தானே இந்தக் கேள்வியைக் கேட்கச் சொன்னேன்? செந்நாய்க்கும் எனக்கும் ஜென்மப் பகை. உன் நட்பும் வேண்டாம், எனக்கு இரையும் வேண்டாம்” என்று சொல்லிவிட்டு ஓட்டம் எடுத்தது பூனை.
அங்கு வந்த சிட்டுக்குருவி, “அழகு என்ற ஒரு வார்த்தைக்கு மனிதர்களைப்போல் மயங்கிவிடக் கூடாது. அப்படி மயங்கினால் ஆபத்தில்தான் முடியும் என்பதை அறிந்துகொண்டாயா? எதிரியின் பெயரைச் சொன்னவுடன் பூனை எப்படிப் பாய்ந்து ஓடுகிறது என்று பார்த்தாயா? ” என்று சிரித்தது சிட்டுக்குருவி.
“நல்லவேளை, என் உயிரைக் காப்பாற்றினாய்” என்று நன்றி கூறியது கவுதாரி. 
பொது அறிவுப் பொக்கிஷம்: கலைப்பகுதி:
கர்நாடக சங்கீதத்தில் எத்தனை மேள கர்த்தா ராகங்கள் உள்ளன?
விடை: 72
சிந்தனைக்கீற்று:
learn flawless.
கற்க கசடற.
செய்திகள்:
இன்று நாங்கனேரி மற்றும் விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல்.
கல்கி ஆசிரமம்: கணக்கில் காட்டாத ரூ.500 கோடி பிடிபட்டது.
தெலுங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் 15 நாட்களாக வேலை நிறுத்தம் செய்துவருகின்றனர்.
நீலகிரியில் குறைந்தது மழை; தொடரும் மண் சரிவு
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

abstract nouns


1.   Angry-கோபம்
2.   Hungry-பசி
3.   Love-அன்பு
4.   Fear-பயம்
5.   Patience-பொறுமை
6.   Envy-பொறாமை
7.   Friendship-நட்பு
8.   Enmity-பகைமை
9.   Mercy-இரக்கம்
10. Humility-பணிவு
11. Dedication-அர்ப்பணிப்பு
12. Satisfaction-திருப்தி
13. Sacrifice-தியாகம்
14. Tireness-களைப்பு
15. Bravery-துணிச்சல்
16. Enthusiasm-உற்சாகம்
17. Effort-முயற்சி
18. Sorrow-சோகம்
19. Respect-மரியாதை
20. Responsibility-பொறுப்புணர்ச்சி

 

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 58) 18.10.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
மழைப்பொழிவிற்குக் காரணமான மரம் பற்றிய பாடல் இசைவெள்ளியில்.
நாளொரு குறட்பா:
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
விளக்கம்: உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்.

இசை வெள்ளி: - மரம் ஏறலாம்

​தென்னைமரத்தில் ஏறலாம்.

தேங்காயைப் பறிக்கலாம்.

மாமரத்தில் ஏறலாம்.

மாங்காயைப் பறிக்கலாம்.

புளியமரத்தில் ஏறலாம்.

புளியங்காயைப் பறிக்கலாம்.

நெல்லிமரத்தில் ஏறலாம்.

நெல்லிக்காயைப் பறிக்கலாம்.

வாழைமரத்தில் ஏறினால்,

வழுக்கிவழுக்கி விழுகலாம்!
பொது அறிவுப் பொக்கிஷம்: சுற்றுலா பகுதி
நாஞ்சில் நாடு என்றழைக்கப்படும் பகுதி எது?
விடை: நாகற்கோவில்
சிந்தனைக்கீற்று:
silence shows a sign of acceptance.
  மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி.
செய்திகள்:
எடப்பாடிக்கு டாக்டர் பட்டம்: பிரேமலதா கிண்டல்!
காஷ்மீர்: சுட்டுக்கொல்லப்பட்டனர்  மூன்று தீவிரவாதிகள்!
விக்கிரவாண்டியில் விஜயகாந்த் பிரச்சாரம்: மகிழ்ச்சியில் தேமுதிக தொண்டர்கள்.
5 நாட்களுக்குக் கனமழை!
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in