பட்டாம்பூச்சி (மாணவர் இதழ்80) 29.நவம்பர்.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
மற்றொருவருக்குக் கற்றுக்கோடுப்பது உங்களுடைய திறமையையும் அதிகமாகவே வளர்க்கும். எனவே மற்றொருவருக்குச் சொல்லிக்கோடுப்பதை வழக்கமாக்குங்கள்.
நாளோரு குறட்பா: - அழுக்காறாமை:
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
விளக்கம்: செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
கணினி வெள்ளி: - கணினி கற்போம்:
சிபியுவின் நினைவாற்றல் பகுதியை இரண்டாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். அதில் ஒன்று ரேம் RAM Random Access memory அதாவது தற்காளிக நினைவகம். மற்றொன்று வன்தட்டு எனப்படுகிற hard disc, அதாவது நிலையான நினைவகம். தற்காளிக நினைவு கணினி செயலில் இருக்கும்போது மட்டும் நிகழ்வுகளை நினைவில் வைத்துக்கொள்ளும். நிரந்தர நினைவகமான வன்தட்டில்தான் நம்முடைய பல காணொளிக்கோப்புகள், ஒலிக்கோப்புகள் மற்றும் டாக்குமெண்டுகளை நிரந்தரமாக சேமித்து வைத்துக்கோள்ளலாம். தொடரும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: சுற்றுலா பகுதி:
திர்ப்பரப்பு அணை எந்த மாவட்டத்தில் உள்ளது?
விடை: கன்னியாகுமரி
சிந்தனைக்கீற்று:
Spread love like a flower.
பூவைப்போல அன்பு மணம் பரப்புங்கள்.
செய்திகள்:
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்
கோட்சே ஒரு தேசபக்தர் என பாஜக எம்.பி பிரக்யா தாகூர் மக்களவையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டுக்கு வீடு இலவச கார் வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப் போகிறேன் சீமான் தெரிவித்துள்ளார்.

வெங்காய விலை உயர்வு குறித்து மக்களவையில் விவாதிக்க கோரி திமுக நேற்று (நவம்பர் 28) ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளது.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

பட்டாம்பூச்சி (மாணவர் இதழ் 79) 28.நவம்பர்.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
தினமும் ஒரு திருக்குறள் படியுங்கள். அது உங்களைச் செம்மைப்படுத்தும்.
நாளொரு குறட்பா: - அழுக்காறாமை:
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
விளக்கம்: உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமின்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும்கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.
வகுப்பறை வியாழன்: - ஆங்கிலம் கற்போம்:
இந்த வாரம் முதல் நாம் காலங்கள் குறித்துப் பேசவிருக்கிறொம். அப்படியானால் வினைச்சொற்கள். ஏனென்றால் பெயர் (noun) காலம் காட்டாது. வினைதான் காலம் காட்டும். அதாவது ஒரு செயல் நிகழ்காலத்தில் நடக்கிறதா, அல்லது எதிர்காலத்தில் நடக்குமா, அல்லது இறந்தகாலத்தில் நடந்ததா என விவரிப்பது வினைச்சொல் ஆகும். தொடரும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - வரலாற்றுப் பகுதி:
சதி என்கிற உடன்கட்டை வழக்கத்தை ஒழிக்கக் காரணமாயிருந்த இந்தியர் யார்?
விடை: ராஜாராம் மோகன்ராய்.
சிந்தனைக்கீற்று:
Less the gap between speak and action.
சொல்லுக்கும் செயலுக்குமான இடைவெளி குறை.
செய்திகள்:
மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே முதல்வர்- இரு துணை முதல்வர்கள்! ...
குடும்ப அட்டைகளுக்குப் பொங்கல் பரிசு ரூ.1000

ஆர்.காம் சொத்துகளை வாங்க போட்டியிடுகிறது  ஜியோ, ஏர்டெல்!
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

பட்டாம்பூச்சி (மாணவர் இதழ் 78) 27.நவம்பர்.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
உங்களின் இயற்கைக் கொசுவத்தி தயாரிப்பு காணொளி பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது. பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும் உங்களுக்கும் பட்டாம்பூச்சி இதழ் சார்பாக வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
நாளொரு குறட்பா: - அழுக்காறாமை
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
விளக்கம்: பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா. அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்.
தகவல் புதன்: - இந்திய அரசியல் அமைப்பு மன்றம்:
இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு[தொகு]
இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த காலத்தில் வெளிநாட்டு ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது. 1934-ல் இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய மன்றம் வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936-இலும் 1939-இலும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, அரசியல் நிர்ணய மன்றத்தை உருவாக்கலாம் என கிரிப்ஸ் தூதுக்குழு மார்ச்-1942-ல் பரிந்துரைத்தது. பின்னர் வந்த அமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946) அரசியல் நிர்ணய மன்றம் ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய மன்றத்திற்கான தேர்தல், ஜூலை 1946-ல் நடைபெற்றது. டிசம்பர் 1946-ல் அரசியல் நிர்ணய மன்றம் கூடியது. அம்மன்றத்தின் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்ஹா டிசம்பர் 09 தேர்வுசெய்யப்பட்டார். பிறகு நிர்ணய மன்றத்தின் நிரந்தர தலைவராக டிசம்பர்-11, 1946-ல் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1947,ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய இந்தியாவானது இந்திய மாகாணம், பாக்கிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய மன்றம் செய்ய வேண்டியதாயிற்று.
பொது அறிவுப் பொக்கிஷம்: அறிவியல் பகுதி:
ஆற்றலின் அலகு எது?
விடை: ஜூல்.
Beauty gives opportunity, but skill gives success.
அழகு வாய்ப்பாத் தரும். திறமைதான் அதை நிலைத்த வெற்றியாக்கும்.
செய்திகள்:
34ஆவது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி!
அரசியலமைப்பு தின விழா: மோடி உரை - புறக்கணித்த எதிர்கட்சிகள்! ...
இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு: மகாராஷ்டிரா  வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

தான் திமுக உறுப்பினர்தான் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி.கணேசமூர்த்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

பட்டாம்பூச்சி (மாணவர் இதழ் 77) 22.நவம்பர்.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
எத்தனை படித்தாலும் ஒழுக்கம் குன்றி நடந்தால், நீங்கள் எவ்வளவு படித்தும் பயனில்லை.
நாளொரு குறட்பா: - அதிகாரம் அழுக்காறாமை
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
விளக்கம்: தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறைமையினால் தீச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
கணினி வெள்ளி: - கணினி அறிவோம்:
இன்று நாம் பார்க்கவிருக்கும் கணினியின் முக்கிய பகுதி கணினியின் மூளை எனப்படுகிற சிபியூ (CPU) Central Process Unit ஆகும். இதுதான் கணினி இயங்குவதற்குக் காரணமான பகுதி. இங்குதான் மூளையைப் போன்றே நினைவகம், செயலகம் அனைத்தும் உள்ளன. தொடரும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: சுற்றுலாப் பகுதி:
அலகாபாத் நகரத்தின் புதிய பெயர் என்ன?
விடை: ப்ரயாக்ராஜ்
சிந்தனைக்கீற்று:
Live let to live.
வாழ் வாழவிடு.
செய்திகள்:
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கம் வென்றார்.
கேரள மாநிலத்தில் 105 வயது மூதாட்டி ஒருவர் அம்மாநில அரசின் எழுத்தறிவு திட்டத்தின் மூலம் நான்காம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலை தடுக்க திமுக-அதிமுக கூட்டணி: தினகரன் பேட்டி.

கமல் -ரஜினியை விட நானே சீனியர் : டி .ஆர் பேட்டி.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

பட்டாம்பூச்சி (மாணவர் இதழ் 76) 21.நவம்பர்.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
தினமும் மூன்று பக்கங்களாவது பிரெயில் வாசியுங்கள். அது உங்களின் மொழித்திறனை வளர்க்கும்.
நாளொரு குறட்பா: அதிகாரம் அழுக்காறாமை:
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
விளக்கம்: அறநெறியையும், ஆக்கத்தையும் விரும்பிப் போற்றாதவன்தான், பிறர் பெருமையைப் போற்றாமல் பொறாமைக் களஞ்சியமாக விளங்குவான்.
வகுப்பறை வியாழன்: - ஆங்கிலம் கற்போம்:
கடந்தவாரம் நான், நீ என்பவைகளின் நேர் ஆங்கிலச் சொற்களைப் பார்த்தோம். இந்த வாரம், எனக்கு, உனக்கு போன்ற சொற்களின் நேர் ஆங்கிலச் சொற்களைப் பார்ப்போம்.
எனக்கு என்னை-me
என்னுடைய-my
உனக்கு உன்னை-you
உன்னுடைய உங்களுடைய-your
எங்களுக்கு எங்களை-us
எங்களுடைய-our
அவனுக்கு அவனை-him
அவனுடைய-his
அவளை அவளுக்கு அவளுடைய-her
அதனை அதற்கு-it
அதனுடைய-its
அவைகளை அவர்களை அவைகளுக்கு அவர்களுக்கு-them
அவர்களுடைய அவைகளுடைய-their
தொடரும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - வரலாற்றுப்பகுதி:
இந்தியாவில் முதன்முதலில் இரயில் சேவை தொடங்கப்பட்ட இடம் எது?
விடை: மும்பை தானே இடையிலான போக்குவரத்து
சிந்தனைக்கீற்று:
All towns are ours, all are our relatives.
யாதும் ஊரே, யாவரும் கேளீர்.
செய்திகள்:
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரை விமரிசித்துப் பேசியதற்காக திருமயம் திமுக எம்.எல்.ஏ. ரகுபதி மீது நான்கு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருக்கிறது.
பள்ளிக்குழந்தைகளுக்கு வாட்டர் பெல்’: புதுவையில் அமல்! ...
தேவைப்பட்டால் கண்டிப்பாக இணைவோம்: ரஜினி, கமல் பேட்டி.

சர்க்கரை ரேஷன் கார்டுகள் இனி அரிசி கார்டுகளாகும்! முதல்வர் உத்தரவு.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

பட்டாம்பூச்சி (மாணவர் இதழ் 75) 20.11.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
ஊன்றுகோல் பழகுங்கள். எதிர்காலத்தில் நாம் தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் இந்த உலகை வளம்வர அதுதான் நமக்கு உதவும்.
நாளொரு குறட்பா: - அழுக்காறாமை:
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
விளக்கம்: யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.
தகவல் புதன்: - புதிய மாவட்டங்கள்:
தமிழகத்தில் வரும் 29ஆம் தேதி புதிதாக ஐந்து மாவட்டங்கள் முதல்வரால் தொடங்கிவைக்கப்பட உள்ளன. அவை, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கல்லக்குறிச்சி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களே அவை.
அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு, வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகியவையும், விழுப்புரம் மற்றும் நெல்லை மாவட்டங்களிலிருந்து முறையே கல்லக்குறிச்சி மற்றும் தென்காசி ஆகியவை பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படுகின்றன.
பொது அறிவுப் பொக்கிஷம்: - அறிவியல் பகுதி:
மின்னோட்டத்தின் அலகு எது?
விடை: ஆம்பியர்
சிந்தனைக்கீற்று:
To absorb the air like bamboo not a ball.
காற்றை உள்வாங்கும்போது மூங்கிலாக இருங்கள், பந்தாக அல்ல.
செய்திகள்:
பெரம்பலூர் அருகே அரியலூர் ஆட்சியர் கார் மோதி ஏற்பட்ட விபத்தில், கல்லூரி மாணவி படுகாயமடைந்துள்ளார்.
சியாச்சின் பனிச்சரிவு: 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி! ...
உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி: டிடிவி தினகரன் பேட்டி.

அதிமுக கொடிக்கம்ப விபத்தில் காலை இழந்த பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

பட்டாம்பூச்சி (மாணவர் இதழ் 74) 19.நவம்பர்.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
களைப்பும் அலுப்பும் சில நேரங்களில் காரியங்களைத் தடுத்துவிடுகின்றன. அப்படித்தான் நமது நேற்றைய பட்டாம்பூச்சி இதழும் வராமல் போனது. நிகழ்விற்கு இதழின் சார்பாக வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
நாளொரு குறட்பா: - அதிகாரம் அழுக்காறாமை
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
விளக்கம்: மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.
இலக்கியச் செவ்வாய்: - இலக்கியம் அறிவோம்:
கடந்தவாரம் பத்துப்பாட்டு, எட்டுத்தோகை ஆகியவை சங்க இலக்கியங்கள் எனப் பார்த்தோம். ஆனால், சில தமிழறிஞர்கள், இவை இரண்டும் பதினெண் மேல்க்கணக்கு நூல்கள் எனவும், இவற்றோடு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களையும் சங்க இலக்கியத்திற்குள் அடக்குவர். அப்படியானால், அந்தப் பதினெட்டு நூல்களும் எவை எனத் தெரிந்துகொள்வது அவசியம்தானே? நிச்சயமாகத் தெரிந்துகொள்வோம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாவன,
1.       திருக்குறள்
2.       நாளடியார்
3.       பழமொழி நானூறு
4.       இன்னா நாற்பது
5.       இனியவை நாற்பது
6.       சிறுபஞ்சமூலம்
7.       ஏளாதி
8.       நான்மணிக்கடிகை
9.       திரிகடுகம். எஞ்சிய ஒன்பதும் அடுத்தவாரம். முதலில் இதா மனணம் செய்யுங்கள்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - இலக்கியப்பகுதி:
சஞ்சாரம் என்கிற சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நாவலை இயற்றியவர் யார்?
விடை: S. ராமகிருஷ்ணன்
சிந்தனைக்கீற்று:
Hungry drives all kinds.
பசிவந்தால் பத்தும் பறந்து போகும்.
செய்திகள்:
தான் முதல்வராவேன் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்தே நேற்று (நவம்பர் 18) பொறுப்பேற்றார்..
பொங்கலுக்குப் பிறகே உள்ளாட்சித் தேர்தல் !

ஐஐடி மாணவி தற்கொலை: பேராசிரியர்களுக்கு சம்மன்!
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

Kanamma kanamma Song | Singer DAYANASRI Children's Day Special | குழந்தை...

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் புதுக்கோட்டை 622001. தொலைபேசி: 04322 226452 மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com வளைதளம்: blindschoolpdkt.in Govt. School for Visually Impaired near new bus-stand and M.L.A. office pudukkottai 622001. contact: 04322 226452 email: gsb.pudukottai@gmail.com web.: blindschoolpdkt.in

பட்டாம்பூச்சி (மாணவர் இதழ் 73) 15.11.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
நாளொரு குறட்பா: - ஒழுக்கம் உடைமை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
விளக்கம்: உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள் பல நூல்களைப் படித்திருந்தும்கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.
கணினி வெள்ளி: - கணினி அறிவோம்:
கணினியில் நாம் தொட்டுணரக்கூடிய பகுதிகள் வன்பொருள்கள் (hardwares) எனப்படும். கணினி இயங்குவதற்கு காரணமான கண்ணுக்குத் தெரியாத செயலிகள் மென்பொருள்கள் (softwares) ஆகும். அதாவது மனிதனையும் கணினியையும் ஒப்பிட்டுச் சிந்தித்தால், வன்பொருள் என்பது நமது உடல் போன்றது. மென்பொருள் நமது உயிர் போன்றது. தொடரும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - சுற்றுலாப்பகுதி:
புத்தர் பிறந்த ஊர் எது?
விடை: கபிலவஸ்து
சிந்தனைக்கீற்று:
Spirit is an art, body is wall.
உயிர் என்பது சித்திரம்,உடல் என்பது சுவர்.
செய்திகள்:
ரஃபேல் ஒப்பந்தம் செல்லும் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
சபரிமலை வழக்கு: 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம்! ...
சந்திராயன் 3: பணியை துவங்கியது இஸ்ரோ!
டெங்கு காய்ச்சலால் மருத்துவர் ஒருவரே உயிரிழந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

பட்டாம்பூச்சி (மாணவர் இதழ் 72) 14.11.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
அனைவருக்கும் பட்டாம்பூச்சி மாணவர் இதழ் சார்பாக குழந்தைகள் தின வாழ்த்துகள். நேரு, இந்தியா என்கிற நாடு உருவாகவும், ஒருங்கிணையவும் முக்கியக் காரணிகளாகத் திகழ்ந்தவர்களுள் ஒருவர். அவருடைய வரலாற்றைப் படிப்பதோடு, சிறையிலிருந்துகொண்டு தன் மகளுக்கு உலக வரலாறுகள் குறித்து அவர் எழுதிய கடிதங்களின் தொகுப்பான டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலையும் படியுங்கள்.
நாளொரு குறட்பா: - அதிகாரம் ஒழுக்கம் உடைமை
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
விளக்கம்: தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்.
வகுப்பறை வியாழன்: - ஆங்கிலம் கற்போம்:
தமிழானாலும், ஆங்கிலமானாலும் ஒரு வாக்கியத்தின் முதலில் வரும் சொற்கள் நான், நீ, நாம், அவன், அவள், அதெ, அவர்கள் மற்றும் அவைகள் என்பவைதாம். அதாவது, ஒரு செயல் நடக்கிறது. அதைச் சொல்வதே வாக்கியத்தின் வேலை. அந்த வாக்கியத்தின் முதல் சொல்லாக அமைவது அந்தச் செயலை யார் செய்கிறார்கள் என்பதுதான். அந்த வகையில் நாம் மேலே பார்த்த சொற்களுக்கான நேர் ஆங்கிளச் சொற்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.
நான் – I am
நீ நீங்கள் – you
நாம் – we
அவன் – he
அவள் – she
அது – it
அவர்கள் அவைகள் – they
தொடரும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - வரலாற்றுப் பகுதி:
ஆங்கிலேயர் அமைத்த காலாப்பாணி சிறை எங்கு அமைக்கப்பட்டிருந்தது?
விடை: அந்தமான்
சிந்தனைக்கீற்று:
Effort never fails.
முயற்சி திருவினையாக்கும்.
செய்திகள்:
கர்நாடகாவில் 17 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது சரிதான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
புதன் கிரகம், சூரியனை அதன் நேர்க்கோட்டில் கடந்து செல்லும் அரிய காட்சியின் வீடியோவை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மாநிலத் தேர்தல் ஆணையத்தில் திமுக மனு அளித்துள்ளது.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

பட்டாம்பூச்சி (மாணவர் இதழ் 71) 13.11.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
அடுத்தவர் மீது பொறாமை கொள்வது தாழ்வு மனப்பான்மையின் முதல் அறிகுறி. எனவே அடுத்தவர் மீதான பொறாமை சிறிய அளவில் தோன்றும்பொதே அதை ஒழித்துவிடுங்கள்.
நாளொரு குறட்பா: அதிகாரம் ஒழுக்கம் உடைமை
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
விளக்கம்: நல்லொழுக்கம், வாழ்க்கையில் நன்மைக்கு வித்தாக அமையும். தீயொழுக்கம், தீராத துன்பம் தரும்.
தகவல் புதன்: -ஆசியா கண்டம்
உலகில் உள்ள கண்டங்களில் மிகப்பெரிய கண்டமே ஆசியா ஆகும். ஆசியா உலகின் 8.8% மொத்தமேற்பரப்புப் பரப்பளவு அதாவது பெருமளவு நிலப்பகுதியைக் கொண்டுள்ளதோடு மட்டுமன்றி பெரிய கடற்கரைப் பிரதேசத்தையும் ஆசியாவே கொண்டுள்ளது, அதன் நீளம் 62,800 கிலோமீற்றர்கள் ஆகும். சுயஸ் கால்வாயும், உரால் மலைகளும் கிழக்குத் திசையிலும், காகசஸ் மலைத்தொடரும், கஸ்பியன் கடலும், கருங்கடலும் தெற்குத் திசையிலும் ஆசியாவின் எல்லைகளாக உள்ளன.[4][5][9] இது கிழக்கில் அமைதிப் பெருங்கடல் ஆலும் தெற்கில் இந்தியப் பெருங்கடல் ஆலும் வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல் ஆலும் சூழப்பட்டுள்ளது. ஆசியா 48 நாடுகளாகப் பிரிக்கப்பட்டுள்ள ஒரு கண்டம், அவற்றில் இரண்டு (உருசியா மற்றும் துருக்கி) ஒரு பகுதியை ஐரோப்பியாக் கண்டத்தில் கொண்டுள்ளன.
ஆசிய பல்வேறுபட்ட காலநிலைகளையும் புவியியல் தோற்றங்களையும் கொண்டது. தினசரி உலகின் அதிக வெப்பநிலை ஆசியாவின் மேற்குப் பக்கங்களிலேயே காணப்படுகின்றது. ஆசியாவின் தென்மேற்குப் பகுதி வெப்பமான காலநிலையைக் கொண்டுள்ளது. அதிகமாகப் புயல் அடிக்கக் கூடிய வாய்ப்புக்களைக் கொண்ட இடங்களான பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு ஜப்பான் ஆசியாவில் அமைந்துள்ள இடங்கள். மங்கோலியாவின் கோபி பாலைவனம் மற்றும் அரபியன் பாலைவனம் ஆகியன மத்திய கிழக்கு வரை பரந்துள்ளன. நோபாளத்துக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கும் இமயமலை, இந்த உலகத்தின் மிகப்பெரிய மலைத்தொடர் ஆகும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - அறிவியல் பகுதி:
நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு என்ன?
விடை: H2O
சிந்தனைக்கீற்று:
Faults are thick when love is thin.
மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்.
செய்திகள்:
அமெரிக்காவில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு இரண்டாவது விருது நேற்று வழங்கப்பட்டது.


பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

பட்டாம்பூச்சி மாணவர் இதழ் 70 12.11.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
இன்றுமுதல் நமது இதழ் பட்டாம்பூச்சியாய் சிறகடிக்க இருக்கிறதஉ.
நாளொரு குறட்பா: அதிகாரம் ஒழுக்கம் உடைமை
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
விளக்கம்: நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்.
இலக்கியச் செவ்வாய்: - இலக்கியம் அறிவோம்:
பத்துப்பாட்டுகளோடு தமிழின் சங்க இலக்கியங்கலஅ கருதப்படுவது எட்டுத்தொகை. எட்டுத்தொகை நூல்களாவன, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், களித்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு போண்றவையாகும். தொடரும்.
பொது அறிவுப் பொக்கிஷம்: இலக்கியப் பகுதி:
பதிற்றுப்பத்து நூல் எந்த மன்னர்களின் பெருமை கூறுகிறது?
விடை: சேர மன்னன்
சிந்தனைக்கீற்று:
Listen high, think high.
பெரிது கேள், பெரிது சிந்தி.
செய்திகள்:
முறிந்தது பாஜக-சிவசேனா கூட்டணி!
ஊர்தோறும், திண்ணைதோறும் பிரச்சாரம்: திமுக முடிவு.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

மறைந்தார் தேர்தல் நாயகன் T.N. ஷேஷன்.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 69) 11.11.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் இந்்த நாளில் நான் எல்லா மனிதர்களிடமும் அன்புடையவனாக இருப்பேன் என உறுதிகொண்டு அந்த நாளைத் தொடங்குங்கள்.
நாளொரு குறட்பா: அதிகாரம் ஒழுக்கமுடைமை
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
விளக்கம்: மன உறுதி கொண்டவர்கள் ஒழுக்கம் தவறுவதால் ஏற்படும் இழிவை உணர்ந்திருப்பதால், நல்லொழுக்கம் குன்றிடுமளவிற்கு நடக்க மாட்டார்கள்.
ஆளுமைத்திங்கள்: ஜவஹர்லால் நேரு
திருமணம்
கமலா கவுல் என்ற 16 அகவை நிரம்பிய காசுமீரிப் பிராமணப் பெண்ணை, 1916 பிப்ரவரி 7 இல் மணந்தார். அவர்களுக்குத் திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷினி என்ற மகள் பிறந்தாள். பின்னாளில் அவர் ஃபெரோசு காந்தியை மணம் புரிந்ததால் இந்திரா காந்தி என்றழைக்கப்பட்டார். கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் ஆர்வமாகச் செயல்பட்டார். ஆனால் 1936 இல் இறந்தார். அதன்பின் நேரு கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார். அரசியல்
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் ஜாலியன்வாலாபாக்கில் ஆயுதம் ஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார். தொடரும்
பொது அறிவுப் பொக்கிஷம்: கலைப்பகுதி:
கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவிய மன்னன் யார்?
விடை: இராஜேந்திர சொழன்.
சிந்தனைக்கீற்று:
Eyes of the house are windows.
ஜன்னல்களே வீட்டின் கண்கள்.
செய்திகள்:
திருநங்கைகள் திமுகவில் சேரலாம்: பொதுக் குழுவில் தீர்மானம்! ...
மிசாவில் ஸ்டாலின் சிறை சென்ற ஆவணங்கள்: வெளியிட்டது திமுக ...
அயோத்தியில் ராமர் கோயில்: உச்ச நீதிமன்றம் ஒரு மனதாகத் தீர்ப்பு.

சாஸ்திரங்கள் அடிப்படையிலான தீர்ப்பு: திருமாவளவன் பேட்டி.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in

தூரிகை (மாணவர் இதழ் 68) 08.11.2019

அன்பு மாணவச் செல்வங்களே!
ஐந்து விரல்களும் வெவ்வேறு உயரத்தில் இருப்பதுபோல, ஒவ்வொரு மனிதரும் தங்கள் குணத்தால், சொல்லால், செயலால் வேறுபட்டுக் காணப்படுவார்கள். எனவே எவரிடமும் எதிர்பார்ப்பு கொள்ளாமல், அன்போடு மட்டும் பழகுங்கள்.
நாளொரு குறட்பா: - அதிகாரம் ஒழுக்கம் உடைமை:
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
விளக்கம்: பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.
கணினி வெள்ளி: - கணினி அறிவோம்:
கணினி என்பது உள்ளீட்டு மற்றும் வெளீயீட்டுச் சாதனங்களை (input and output devices) உள்ளடக்கிய வன்பொருள் மற்றும் மென்பொருள்களால் (hardwares and softwares) ஆன ஒரு மின்னணு சாதனம்.
நாம் தகவல்களை உள்ளிட்டு மீண்டும் பெறும் வகையில், விசைப்பலகை (keyboard) மற்றும் மௌஸ் ஆகியவற்றின் மூலமாக நாம் தகவல்களை உட்செலுத்துவதால் இவை உள்ளீட்டுக் கருவிகள். நாம் விரும்பும் தகவல்களை நமக்கு வழங்குகிற கணினித்திரை (monitor) மற்றும் ஒலிப்பான்கள் (speakers) ஆகியவை வெளீயீட்டுக் கருவிகள். சரி வன்பொருள் மென்பொருள் என்றால் என்ன? அடுத்த வாரம்.
பொது அறிவுப் பொக்கிஷம்: - சுற்றுலாப்பகுதி:
பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களின் ஒரே தலைநகரம் எது?
விடை: சண்டிகட்
சிந்தனைக்கீற்று:
To learn from mistake is knowledge.
தவறுக்கு வருந்துவதைவிட அதிலிருந்து கற்றுக்கொள்வதே அறிவு.
செய்திகள்:
கட்டுமானத் துறைக்கு 25000 கோடி நிதி: மத்திய அரசு ஒதுக்கீடு.
சேலத்தில் பெண் அதிகாரியை அறைந்த இளைஞர் கைது!
முரசொலி அலுவலகத்துக்குப் பாதுகாப்பு கேட்கிறது திமுக! ...

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயார்: கமல் பேட்டி.
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளி
புதிய பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில்
புதுக்கோட்டை 622001.
தொலைபேசி: 04322 226452
மின்னஞ்சல்: gsb.pudukottai@gmail.com
வளைதளம்: blindschoolpdkt.in
Govt. School for Visually Impaired
near new bus-stand and M.L.A. office
pudukkottai 622001.
contact: 04322 226452
email: gsb.pudukottai@gmail.com
web.: blindschoolpdkt.in